Nanda Movie Actress : "அண்ணானு கூப்பிடாதீங்க"னு சூர்யா சொல்லுவாரு...! பிரபல நடிகை பகிர்ந்த சுவாரஸ்யம்...!
பாலா இயக்கத்தில் உருவாகிய நந்தா படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த ராஜஸ்ரீ சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசு தேசிய விருதுகளை நேறறு அறிவித்தது. இதில், கோலிவுட்டில் வெளியான சூரரைப் போற்று, மண்டேலா மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படங்கள் விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் விருதை வென்ற நடிகர் சூர்யாவுக்கு தமிழ் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம் நந்தா. இந்த படத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அசத்தியிருப்பார். இந்த படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடிகை ராஜஸ்ரீ நடித்திருப்பார். வெள்ளித்திரையில் பரப்பபான இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அமுதாவும், அன்னலட்சுமியும் என்ற தொடரில் நடிக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார் ராஜஸ்ரீ. அவர் கூறியிருப்பதாவது, “ நடிகர் சூர்யா எனது மிகவும் நெருங்கிய நண்பர். அவர் என்னைவிட ஐந்து வயது பெரியவர். ஆனாலும், நந்தா படத்தில் அவருடைய அம்மாவாக நான் நடித்தேன்.
படப்பிடிப்பின்போது அவரை நான் அண்ணா என்று கூப்பிடுவேன். ஆனால், அவர் தயவு செய்து என்னை அண்ணானு மட்டும் கூப்பிடாதீங்க என்று சொல்வார். தற்போது வரை நான், சூர்யா மற்றும் பாலா சார் ஆகியோர் நல்ல நண்பர்கள். இப்போதும் நாங்கள் பேசிக்கொள்வோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாதவி என்ற இயற்பெயர் கொண்ட ராஜஸ்ரீயின் இயற்பெயர் மாதவி. பாரதிராஜாவின் கருத்தம்மா படம் மூலமாக 1994ம் ஆண்டு திரையில் அறிமுகமானார். பின்னர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று பன்மொழிகளில் நடித்தார். அப்போதுதான் 2001ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய நந்தா படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் சூர்யாவின் தாயாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு, அவருக்கு தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மட்டுமே வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான வர்மா வெளியானது. தற்போது, இந்தியிலும், தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
நந்தா படத்தில் சூர்யாவும், ராஜஸ்ரீயும் அம்மா – மகன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















