மேலும் அறிய

Manobala : ”பூணூலை அறுத்துப்போட்டேன். திரும்ப ஆன்மீகத்துக்கு திரும்பிட்டேன்" - மனோபாலா பகிர்ந்த வாழ்க்கை பக்கங்கள்..

"கையில காசு இல்லாத சமயத்தில் நான் தற்கொலை முடிவு எடுத்துட்டு , திருச்சி வெக்காளியம்மன் கோவிலுக்கு போனேன்."

நாத்திக கருத்துக்களில் இருந்து எதிர்காலத்தின் மீதான பயம் காரணமாக மீண்டும் ஆன்மிகத்துக்கே திரும்பியதாக தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மனோபாலா.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்  மனோபாலா. 1982-ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா , அடுத்தடுத்து பல படங்களில் இயக்குநராக களம் கண்டவர். இதுவரையில்  40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். இது தவிர 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மனோபாலா ஒரு சிறந்த வீணை வாசிப்பாளரும், ஓவியரும் கூட. இயக்குநராக வேண்டுமானால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாக வேண்டும் என நினைத்ததாக கூறும் மனோபாலா , தன் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்திருக்கிறார்.


Manobala : ”பூணூலை அறுத்துப்போட்டேன். திரும்ப ஆன்மீகத்துக்கு திரும்பிட்டேன்


"நாளைக்கு காலையில நீ உயிரோட இருக்க கூடாதுன்னு கவுளி கத்தும் , சூனியம் வச்ச மாதிரி துரத்தும் அதிலிருந்து தப்பிச்சு தப்பிச்சு ஓடு வருவதுதான் திரையுலகம். எனக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . கையில காசு இல்லாத சமயத்தில் நான் தற்கொலை முடிவு எடுத்துட்டு , திருச்சி வெக்காளியம்மன் கோவிலுக்கு போனேன். அங்க  மனதில் உள்ளதை எல்லாம் கடிதமாக எழுதி கோவில்ல கட்டிட்டு, சென்னை வந்து இறங்கும்பொழுது 1 ரூ 20 பைசா இருந்துச்சு. அதில் 1 ரூபாய்க்கு  ஒரு தோசை வாங்கி , நிறைய சாம்பார் ஊத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போ ஒரு  கார் வந்து நின்றது. "டைரக்டரே எப்படி இருக்கீங்க?” அப்படினு  ஒரு குரல் வந்ததும் நான் ஷாக் ஆகிட்டேன். கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கிருச்சு. அவர்தான் கலைமணி அவர்கள் . அடுத்த படம் பிள்ளை நிலா நீங்கதான் இயக்கணும்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாரு. அந்த 50 ரூபாயை இன்னும் வெச்சிருக்கேன்.  

பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். இப்போ நடக்குற பாருங்க சமுதாய பிரச்சனை அப்போதும் இருந்தது. எல்லோரும் பாரதிராஜாவிடம், அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு! அவனை சேர்த்தா உனக்கு ஆபத்துன்னு சொன்னாங்க. ஆனால் அதையும் தாண்டி என்னை பாரதிராஜா சேர்த்துக்கிட்டாரு. அப்படி சொன்னவங்க நிறைய பேர் இருக்காங்க.  அதனை விளக்கும் வகையிலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தை எடுத்தோம்.

சாதியை ஒழிக்க பூணூலையும், சிலுவையையும் அறுத்து போடுவதை விட வேறு வழி இல்லை என்பதை காட்டியவர்கள் நாங்கள்தான். அதற்கு சாட்சியாக பெரியாரை நினைத்து பூணூலை அறுத்து போட்டேன். கொஞ்ச காலம் அவர் வழியில்தான் இருந்தேன். அதன் பிறகு எதிர்காலத்தை நோக்கி பயம் வந்தது. அதனால் மீண்டும் ஆன்மீக வழிக்கே சென்றுவிட்டேன்" என்றார் மனோபாலா . 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget