மேலும் அறிய

Mahesh Babu : ஒரிஜினல் பீடி கிடையாது.. ஆயுர்வேத பீடி.. சர்ச்சைக்கு பதிலளித்த மகேஷ் பாபு  

Mahesh Babu : 'குண்டூர் காரம்' படம் முழுக்க மகேஷ் பாபு பயன்படுத்திய பீடி குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார் 

Guntur Kaaram : தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் மகர சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், ஜெகபதி பாபு, சுனில், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

Mahesh Babu : ஒரிஜினல் பீடி கிடையாது.. ஆயுர்வேத பீடி.. சர்ச்சைக்கு பதிலளித்த மகேஷ் பாபு  

ஆக்ஷன் ஜானரில் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் காம்போ என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் இப்படம் வெளியான முதல் நாள் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் திரண்டதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மட்டுமே ரூ.94 கோடி என நெருங்கிய டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் மகேஷ் பாபு நடித்த படங்களில் அதிக ஓப்பனிங் பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் அவரின் ரசிகர்கள் குண்டூர் காரம் படத்தை கொண்டாடி வருகிறார்கள். 

'குண்டூர் காரம்' படத்தில் நடிகர் மகேஷ் பாபு, ரவுடித்தனம் கொண்ட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். எந்நேரம் புகையும் பீடியுமாக லுங்கியில் அலட்டலான ஒரு பாடி லாங்குவேஜ் கொண்டு படம் முழுக்க ட்ராவல் செய்துள்ளார் மகேஷ் பாபு. இதனால் அவர் படம் முழுக்க பீடி குடித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் பீடி பயன்படுத்தியது குறித்து விளக்கம் ஒன்றை கூறி இருந்தார். 

"குண்டூர் காரம் படத்தில் நான் பயன்படுத்தியது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. படப்பிடிப்பு துவங்கியபோது ஒரிஜினல் பீடியை முதல்முறை பயன்படுத்த கொடுத்தார்கள். பயன்படுத்திய கொஞ்ச நேரத்திலேயே தலைவலி வந்துவிட்டது. 

Mahesh Babu : ஒரிஜினல் பீடி கிடையாது.. ஆயுர்வேத பீடி.. சர்ச்சைக்கு பதிலளித்த மகேஷ் பாபு  

இது இயக்குநருக்கு தெரியவந்தது. அதற்கு மேல் அந்த பீடியை பயன்படுத்த முடியாது என நான் கூறியதால், இந்த ஆயுர்வேத பீடியை கொடுத்தார்கள். இதை பயன்படுத்துவதால் எந்த பிரச்சினையும் வராது என உறுதிப்படுத்திய பிறகுதான் பயன்படுத்தினேன். அது நன்றாக இருக்கவே படம் முழுக்க அதைப் பயன்படுத்தினேன். புகைபிடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. மேலும் அதை நான் மற்றவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கவும் மாட்டேன்" என தெளிவான விளக்கம் கொடுத்து இருந்தார் நடிகர் மகேஷ் பாபு.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget