மேலும் அறிய

Lokesh Kanagaraj : சமூக வலைதளத்தைவிட்டு விலக இருக்கிறேன்...ரசிகர்களின் தொல்லையால் லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு

சமூக வலைதளங்களில் இருந்து தான் விலக இருப்பதாகவும் தனது இந்த முடிவிற்கான காரணத்தையும் பகிர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் `19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லியோ படத்தின் ப்ரோமோஷன்களுக்காக கடந்த 20 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ படம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் அதே நேரத்தில் சினிமா குறித்த பல்வேறு  நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி  வருகிறார்.

சமூக வலைதளங்களில் லியோ

லியோ படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பின் காரணத்தினால் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் படம் குறித்தான தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதில் சில தவறான வதந்திகளும் பரவி வருகின்றன. லோகேஷ் கனகராஜ்  மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக சமீபத்தில் இணையதளத்தில் தவறான வதந்தி பரவியது. 

ரசிகர்களின் மோதல்

இதனைத் தொடர்ந்து அஜித் , ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய மூன்று நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையில் பல்வேறு கருத்து மோதல்கள் சமூக வலைதளத்தில் ஏற்பட்டு வருகிறது. இதில் லியோ படத்தையும் தவறாக விமர்சித்து வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களை தாக்கி வருகிறார்கள். இந்த சர்ச்சைகளில் எல்லாம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை டேக் செய்தும் வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் தனது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

சமூக வலைதளத்தை விட்டு விலக முடிவு

”ஒரு படத்தின் வசூல் பற்றி அதிக அழுத்தம் ரசிகர்களிடம் இருப்பதை நான் பார்க்கிறேன். ஒரு படத்தின் வசூல் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் ஆதிக்கத்தை நிரூபிக்கும் கருவியாக அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு வகையில் இது தவறான திசை நோக்கி ரசிகர்களை வழிநடத்துகிறது. இதனால் நான் சமூக வலைதளத்தை விட்டு விலகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பதிவுகளில் என்னை ரசிகர்கள் டேக் செய்கிறார்கள்.  நான் பல திரைப் பிரபலங்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பதால் என்னை இந்த பதிவுகளில் டேக் செய்கிறார்கள். ஆனால் தெரியாமல் இந்த பதிவுகளை நான் லைக் செய்துவிட்டால், அதை காரணமாக காட்டி என்னை விமர்சிப்பார்கள். என்னை தவறாக புரிந்துகொள்வார்கள். நான் சமூக வலைதளத்தில் இருப்பதற்கு ஒரே காரணம், சின்ன பட்ஜட்டில் எடுக்கப்படும் படங்களை என்னுடைய ஆதரவை தெரிவிப்பது மூலம் அந்த படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. மற்றபடி சமூக வலைதளத்தில் இருக்க எனக்கு எந்த வித விருப்பமும் இல்லை. இதுவெறும் இரண்டரை மணி நேர படம்தான். அதை பார்த்துவிட்டு எல்லாரும் அவரவர் வேலைகளுக்கு செல்லலாம். இதை ஒரு போர் மாதிரி எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
Breaking News LIVE: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் -  இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க
Breaking News LIVE: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் -  இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
Breaking News LIVE: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் -  இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க
Breaking News LIVE: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் -  இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதா? அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு விளக்கம்
Shocking Video: மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
மைசூரு அரண்மனையில் சண்டையிட்டுக்கொண்டே ஓடிய 2 தசரா யானைகள்.! பெரும் பரபரப்பு..!
Sellur Raju: தெர்மாகோல் திட்டம்... “இவர்கள் சொல்லிதான் நான் செய்தேன்” - செல்லூர் ராஜூ
தெர்மாகோல் திட்டம்... “இவர்கள் சொல்லிதான் நான் செய்தேன்” - செல்லூர் ராஜூ
Nalla Neram Today Sep 21: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 21:சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Udhayanidhi - Rajini : ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
Embed widget