Dhanush Aishwarya Split: ”அவர்களை விட்டுவிடுங்கள்..” தனுஷ் - ஐஷ்வர்யா பிரிவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கமெண்ட்
முறைப்படி விவாகரத்து பெறும் முன்பு யாரையும் காதலிக்காமல், மன உளைச்சல் கொடுக்காமல் பிரிகிறார்கள். அவர்களை தனியாக விட்டுவிடுங்கள் - லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகர் தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 18 வருடங்கள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தனுஷும், ஐஷ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம்.
ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களின் இந்த முடிவு தனுஷ் மற்றும் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐஷ்வர்யாவுக்கு ஆன்மிகத்தில் எழுந்த நாட்டம்தான் விவாகரத்துக்கு காரணம், இல்லை இல்லை தனுஷ் மீது தொடர்ந்து கிசுகிசு வந்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என பலர் பல காரணங்களை கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களது பிரிவை ஆராய்ச்சி செய்து மேலும் அவர்களுக்கு மன உளைச்சல் கொடுக்காமல் அதனை மதிக்க வேண்டுமென்பது ஒரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
They are moving away respectfully, not causing mental trauma to each other by badmouthing publicly or romancing with someone else before getting legally divorced, pls leave them alone,
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 17, 2022
இந்நிலையில் தனுஷ் செய்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டேக் செய்து, “இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? இருவரையும் சேர்த்து வையுங்கள்” என பதிவிட்டார்.
அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “அவர்கள் மரியாதையான முறையில் பிரிகிறார்கள். ஒருவரையொருவர் அசிங்கமாக பேசாமல், முறைப்படி விவாகரத்து பெறும் முன்பு யாரையும் காதலிக்காமல் மன உளைச்சல் கொடுக்காமல் பிரிகிறார்கள். அவர்களை தனியாக விட்டுவிடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்