மேலும் அறிய

Thalapathy: பாட்டுல கூட அரசியலா? - விஜய் பட பிரச்னையால் கோபப்பட்ட விஜய் ஆண்டனி

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் “வேலாயுதம்” படம் வெளியானது. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்த இப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கியிருந்தார்.

விஜய் படத்துக்கு பாடல் எழுதும் போது செய்யப்பட்ட அரசியலால் தான் வருந்திய சம்பவம் தொடர்பாக பாடலாசிரியர் பிரியன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் “வேலாயுதம்” படம் வெளியானது. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்த இப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். அந்தாண்டு தீபாவளிக்கு வெளியான வேலாயுதம் படம் முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன் என திரைக்கதையோடு கலவையான விமர்சனத்தைப் பெற்றது. 

இப்படியான நிலையில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் ஆகியது. விஜய் கேமியோ ரோலில் நடித்த சுக்ரன் படத்தில் தான் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த வேட்டைக்காரன் படத்துக்கு இசையமைத்தார் விஜய் ஆண்டனி. இதனையடுத்து 3வது முறையாக இந்த இருவரும் கூட்டணி அமைத்தனர். அப்படத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் பற்றி கவிஞர் பிரியன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அதாவது, “நான் விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் பாட்டு எழுதினேன். அதில் நான் எழுதியது தான் ஓப்பனிங் பாடலாக வரவேண்டியது. ஆனால் அங்கேயும் அரசியல் செய்யப்பட்டது. அதில் “வேலா வேலா” பாடல் தானே விஜய்யின் அறிமுக பாடலாக இருக்க வேண்டியது. எப்போதுமே ஹீரோ அறிமுக பாடல் டைட்டில் வைத்து தானே வரும். நீங்கள் அந்த படத்தில் பார்த்தால் வேறு பாடல் இடம் பெற்றிருக்கும். ஏனென்றால் அங்கு மிகப்பெரிய அரசியல் செய்யப்பட்டது. சாதாரணமாக ஒரு படத்தில் பாடல் எழுதுவதற்கும், விஜய் படத்துக்கு எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்குல. நான் இதையெல்லாம் பார்த்து விட்டு பரவாயில்லை என விட்டுவிட்டேன். ஆனால் விஜய் ஆண்டனி சாருக்கு கோபம் வந்து விட்டது.

அவர் என்னிடம், ‘இல்ல பிரியன். இந்த பாடல் தான் டைட்டில் பாடலாக வந்திருக்க வேண்டும். நான் படம் முழுக்க வைக்கிறேன்’ என சொல்லிவிட்டு கிட்டதட்ட 30 இடங்களில் வைத்து விட்டார். அந்த பாடல் வரிகளாகவும், பிஜிஎம் ஆகவும் கோபத்தில் வைத்தார் விஜய் ஆண்டனி.  நாங்கள் இருவரும் முடிவு பண்ணிய பிறகு அதில் வேறொரு பிரச்சினை வருகிறது. விஜய் படத்தில் பாட்டு எழுதவே அரசியல் பண்ணுகிறார்கள் என்றால் நம்ம படம் பண்ண வரும்போது என்னவெல்லாம் செய்வார்கள். இதை நாகரிகம் கருதி, சினிமாவில் இதெல்லாம் சகஜம் என வளைந்து கொடுத்து செல்வார்கள் என நினைக்கிறார்கள்” என பிரியன் தெரிவித்திருந்தார். 

வேலாயுதம் படத்தில் அறிமுக பாடலாக “சொன்னா புரியாது” பாடல் இடம் பெற்றது. இப்பாடலை சிவா சண்முகம் என்பவர் எழுதிய நிலையில் விஜய் ஆண்டனியும்,வீர சங்கர் ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: தமிழ் கடவுள் முருகப்பெருமான் என்று  சொல்லி பதவியேற்ற காங்கிரஸ் எம்.பி.
Breaking News LIVE: தமிழ் கடவுள் முருகப்பெருமான் என்று சொல்லி பதவியேற்ற காங்கிரஸ் எம்.பி.
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
TNCMTSE 2024: ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: தமிழ் கடவுள் முருகப்பெருமான் என்று  சொல்லி பதவியேற்ற காங்கிரஸ் எம்.பி.
Breaking News LIVE: தமிழ் கடவுள் முருகப்பெருமான் என்று சொல்லி பதவியேற்ற காங்கிரஸ் எம்.பி.
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
Chennai HC Judge On Caste: தீர்ப்புகளில் ஜாதி, மதம் - உடலில் அணிந்திருப்பதை பார்த்து தீர்ப்பு வழங்கமாட்டேன் - நீதிபதி ஜெயச்சந்திரன் ஆவேசம்
TNCMTSE 2024: ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
ரூ.10 ஆயிரம் உதவித்தொகை; முதலமைச்சர்‌ திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி!
EPS meets Governor: கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம்; தமிழகத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? ஈபிஎஸ் சரமாரிக் கேள்வி
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Indian 2: ஊழல் அதிகமானதால்தான் இந்தியன் தாத்தா வருகிறார் - ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு!
ஊழல் அதிகமானதால்தான் இந்தியன் தாத்தா வருகிறார் - ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு!
Embed widget