”கத்ரினா கைஃப் கூட இருந்ததால விஜய்சேதுபதி என்னை கண்டுக்கவே இல்லை “ - விக்னேஷ் சிவன்
"நான் அடுத்த நாள் ஒரு 2 மணி நேரம் ஷூட் இருக்கும் , கொஞ்சம் வர முடியுமானு கேட்டேன்."

விஜய் சேதுபதி , நயன் தாரா , சமந்தா நடிப்பில் முக்கோண காதல் கதையாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ காத்து வாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகயிருக்கிறது. தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் யூடியூப் நிறுவனத்திற்கு பேட்டியளித்த விக்னேஷ் சிவன் , படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
“ நாங்க ரெண்டு காதல் பாட்டு எடுத்தோம். அப்போவே விஜய் சேதுபதிக்கு சந்தேகம் மறுபடியும் கூப்பிட்டு வந்து நிற்க வச்சிருவானோனு. நான் அடுத்த நாள் ஒரு 2 மணி நேரம் ஷூட் இருக்கும் , கொஞ்சம் வர முடியுமானு கேட்டேன். ஏன்னா நாங்க அதரப்பள்ளியில ஷூட்டிங் எடுத்தோம் . அதற்கு எதிர்புறமா , ஆறு எல்லாத்தையும் கடந்துதான் இன்னொரு இடத்திற்கு போகனும். அதனால அரை நாள் ஷூட்டிங்கிற்கு கேட்டிருந்தேன். இவருக்கு கத்ரினா கைஃபோட ஷூட்டிங் இருந்தது. அதனால இவர் என்னை கண்டுக்கவே இல்லை. அவங்கதான் முக்கியம்னு போயிட்டாரு. எனக்கு அது பெருசா தெரியலை ஏன்னா எனக்கும் கத்ரினா கைஃப்னா பிடிக்கும். அதோட நான் ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு நாள் கால் பண்ணி ஷூட் முடிஞ்சுட்டானு கேட்டாரு. முடிந்தது சார்னு சொல்லிட்டேன். ஆனாலும் எனக்கும் அந்த போஷன் மட்டும் எடுக்காம விட்டது தயக்கமா இருந்தது. அதன் பிறகு இவருக்கு கால் பண்ணி பேசினேன். ஒரு இரண்டு நாள் கொடுங்க அந்த சீன் மட்டும் எடுத்தற்றேன்னு, அன்னைக்கு இவரு மனைவியோட பிறந்தநாள், அப்புறம் இவரை சமாதானம் பண்ணி, இவங்க மனைவியை சமாதானம் பண்ணி ஒரு வழியா அந்த ஷூட்டை எடுத்து முடித்தேன் “ என்றார் விக்னேஷ் சிவன் .
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















