![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
உன்னால்தான் இந்தப் படம் .. உனக்குதான் இந்த வெற்றி... நயன் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!
அன்புள்ள தங்கமே மற்றும் இப்போது கண்மணி … என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி என்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![உன்னால்தான் இந்தப் படம் .. உனக்குதான் இந்த வெற்றி... நயன் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு! kathuvakkula rendu kadhal director vignesh shivan posted about nayanthara in insta page உன்னால்தான் இந்தப் படம் .. உனக்குதான் இந்த வெற்றி... நயன் குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/29/fa45456933098e19e95445f7dfa23448_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்ததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இப்படம் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த நயன்தாராவிற்கு நன்றி என்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு மிகவும் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், அன்புள்ள தங்கமே மற்றும் இப்போது கண்மணி … என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி!
ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாகவும், அறியாமையிலும் இருக்கும்போது நீ எனக்கு முதுகில் தட்டி கொடுக்கும்போது எனக்காக எவ்வளவு உறுதுணையாக இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. நீங்கள் என்னுடன் நின்ற விதம்.. என்னை முடிவுகளை எடுக்க வைத்தது. இவை அனைத்தும் என்னையும் இந்த படத்தையும் முழுமைப்படுத்துகிறது! உன்னால்தான் இந்தப் படம் .. உனக்குதான் இந்த வெற்றி !!! என் கண்மணி
View this post on Instagram
இன்று நீங்கள் திரையில் ஜொலிப்பதைக் காண, மீண்டும் உங்களை இயக்கி உங்களிடமிருந்து சிறந்ததை வெளிக்கொணர ! ஒரு இயக்குநராக எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களைப் புத்திசாலித்தனமாகச் செய்வது எப்போதுமே மனதைக் கவரும் அனுபவம்! என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ‘போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து ‘நானும் ரெளடிதான்’ ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அடுத்ததாக அஜித் படத்தை இயக்க இருக்கும் இவர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’ பாடல், வலிமையில் ‘நாங்க வேற மாதிரி’ ‘அம்மா’ உள்ளிட்ட பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)