மேலும் அறிய

Kalaignar Memorial Day: சாமானியன் எழுப்பிய குரல்... இன்றுவரை பேசப்படும் கலைஞரின் பராசக்தி.. காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பராசக்தி திரைப்படத்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடமுண்டு. 60 ஆண்டுகளுக்கு மேலும் இன்னும் பராசக்தி திரைப்படம் நிலைத்து நிற்பதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்!

இன்று நவீன சினிமா இயக்குநர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த படங்களின் வரிசையில் பராசக்தி படத்தை  நிச்சயம் குறிப்பிடுவார்கள்.

1952 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதினார் கருணாநிதி. அவரது சினிமா கரியரில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் பராசக்தி.

பராசக்தி

வாழ்க திராவிடம் என்கிற பாடலில் இருந்து தொடங்குகிறது படம். இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்புகளால் தமிழ் நாட்டில் இருந்து தங்கள் குடும்பங்களை விட்டு பலர் பர்மாவிற்கு பிழைக்க செல்கிறார்கள். அப்படி சென்ற குடும்பம் தான் குணசேகரனுடைய (சிவாஜி) குடும்பம். பர்மா சென்று செல்வ செழிப்பாக வாழ்கிறது அவரது குடும்பம் தனது இரு அண்ணன்களின் வளர்ப்பில் வளரும் குணசேகரனுக்கு சொகுசாக வாழ்க்கையைத் தவிர எதுவும் தெரியாது.

தமிழ்நாட்டில் இருக்கும் தனது தங்கையின் கல்யாணத்திற்கு கடும் போர் நிலவி வந்த சூழலில் கிளம்பி செல்கிறான் குணா. ஆனால் சென்னை வந்ததும் ஒரு பெண்ணால் ஏமாற்றப்படுகிறான். மதுரையில் இருக்கும் தனது தங்கை வீட்டிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் எனப் போராடுகிறான். அதே நேரத்தில் குணாவின் தங்கை ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்து, ஒரு விபத்தில் தனது கணவனையும் இழக்கிறாள்.

பர்மாவில் போர்ச்சூழல் தீவிரமடைந்த காரணத்தினால் நடைபயணமாக தமிழ்நாட்டிற்கு பயணப்படுகிறார்கள் தமிழர்கள். அதில் குணாவின் இரண்டு அண்ணன்களும், அண்ணியும் அடக்கம். இந்தப் பயணத்தில் குணாவின் இரண்டாவது அண்ணன் உயிரிழக்கிறார். பிழைப்பிற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் குணசேகரன் பைத்தியமாக நடிக்கத் தொடங்குகிறான்.

இறுதியாக தனது தங்கையை அடையாளம் கண்டு அவளது நிலையை உணர்ந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்கிறான் குணசேகரன். இப்படியாக கதை நகர படத்தின் இறுதியில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குணா பேசும் வசனங்களும் வார்த்தைகளும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படம் அனைவராலும் பேசப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளன.

சாமானிய மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் என ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் பார்த்து கேள்வி எழுப்பிய காட்சியை முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தது கருணாநிதி தான் . அன்னியன், ரமணா, முதல்வன், கத்தி, என அரசியல் பேசிய எந்தப் படத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டாலும் அந்தப் படங்களில் கதாநாயகன் பேசும் வசனங்கள். தொனி, வார்த்தைகளின் பிரயோகம் என அனைத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தப் படம் ‘பராசக்தி’.

 தனது வசனங்களின் மூலம்  தீண்டாமை, சமூக சீர்கேடுகள் பெண் ஒடுக்குமுறை ஆகிய அனைத்தையும் கேள்விகளுக்கு உட்படுத்தினார் கருணாநிதி.  மேலும் திராவிடம் குறித்தான சிந்தனைகளையும், மக்களுக்கு பகுத்தறிவு குறித்தான விழிப்புணர்வையும் புரட்சிகரமான தொனியில் இப்படம் மூலம் கொண்டு சேர்த்தார் கருணாநிதி.

 

தலைப்பு செய்திகள்

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget