மேலும் அறிய

Kalaignar Memorial Day: சாமானியன் எழுப்பிய குரல்... இன்றுவரை பேசப்படும் கலைஞரின் பராசக்தி.. காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பராசக்தி திரைப்படத்துக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடமுண்டு. 60 ஆண்டுகளுக்கு மேலும் இன்னும் பராசக்தி திரைப்படம் நிலைத்து நிற்பதற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்!

இன்று நவீன சினிமா இயக்குநர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த படங்களின் வரிசையில் பராசக்தி படத்தை  நிச்சயம் குறிப்பிடுவார்கள்.

1952 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதினார் கருணாநிதி. அவரது சினிமா கரியரில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் பராசக்தி.

பராசக்தி

வாழ்க திராவிடம் என்கிற பாடலில் இருந்து தொடங்குகிறது படம். இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்புகளால் தமிழ் நாட்டில் இருந்து தங்கள் குடும்பங்களை விட்டு பலர் பர்மாவிற்கு பிழைக்க செல்கிறார்கள். அப்படி சென்ற குடும்பம் தான் குணசேகரனுடைய (சிவாஜி) குடும்பம். பர்மா சென்று செல்வ செழிப்பாக வாழ்கிறது அவரது குடும்பம் தனது இரு அண்ணன்களின் வளர்ப்பில் வளரும் குணசேகரனுக்கு சொகுசாக வாழ்க்கையைத் தவிர எதுவும் தெரியாது.

தமிழ்நாட்டில் இருக்கும் தனது தங்கையின் கல்யாணத்திற்கு கடும் போர் நிலவி வந்த சூழலில் கிளம்பி செல்கிறான் குணா. ஆனால் சென்னை வந்ததும் ஒரு பெண்ணால் ஏமாற்றப்படுகிறான். மதுரையில் இருக்கும் தனது தங்கை வீட்டிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் எனப் போராடுகிறான். அதே நேரத்தில் குணாவின் தங்கை ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்து, ஒரு விபத்தில் தனது கணவனையும் இழக்கிறாள்.

பர்மாவில் போர்ச்சூழல் தீவிரமடைந்த காரணத்தினால் நடைபயணமாக தமிழ்நாட்டிற்கு பயணப்படுகிறார்கள் தமிழர்கள். அதில் குணாவின் இரண்டு அண்ணன்களும், அண்ணியும் அடக்கம். இந்தப் பயணத்தில் குணாவின் இரண்டாவது அண்ணன் உயிரிழக்கிறார். பிழைப்பிற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் குணசேகரன் பைத்தியமாக நடிக்கத் தொடங்குகிறான்.

இறுதியாக தனது தங்கையை அடையாளம் கண்டு அவளது நிலையை உணர்ந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்கிறான் குணசேகரன். இப்படியாக கதை நகர படத்தின் இறுதியில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குணா பேசும் வசனங்களும் வார்த்தைகளும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் படம் அனைவராலும் பேசப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளன.

சாமானிய மனிதர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் என ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் பார்த்து கேள்வி எழுப்பிய காட்சியை முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தது கருணாநிதி தான் . அன்னியன், ரமணா, முதல்வன், கத்தி, என அரசியல் பேசிய எந்தப் படத்தை வேண்டுமானால் எடுத்துக்கொண்டாலும் அந்தப் படங்களில் கதாநாயகன் பேசும் வசனங்கள். தொனி, வார்த்தைகளின் பிரயோகம் என அனைத்துக்கும் முன்னுதாரணமாக அமைந்தப் படம் ‘பராசக்தி’.

 தனது வசனங்களின் மூலம்  தீண்டாமை, சமூக சீர்கேடுகள் பெண் ஒடுக்குமுறை ஆகிய அனைத்தையும் கேள்விகளுக்கு உட்படுத்தினார் கருணாநிதி.  மேலும் திராவிடம் குறித்தான சிந்தனைகளையும், மக்களுக்கு பகுத்தறிவு குறித்தான விழிப்புணர்வையும் புரட்சிகரமான தொனியில் இப்படம் மூலம் கொண்டு சேர்த்தார் கருணாநிதி.

 

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget