மேலும் அறிய

Kalki 2898 AD: வரலாற்று வில்லன்களை சூப்பர் ஹீரோக்களாக மாற்றிய கல்கி - எதிர்பாராத டிவிஸ்ட் ஏராளம்! அப்படி என்ன வொர்த்?

Kalki 2898 AD: அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்கள் நடிப்பில், கல்கி திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.

Kalki 2898 AD: பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கல்கி திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்க வேண்டியது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

கல்கி திரைப்படம்:

இந்தியாவின் புனித இதிகாசங்களாக கருதப்படும் மகாபாரதம் மற்றும் ராமயாணத்தை அடிப்படைகாக கொண்டு, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் என ஏராளமானவை வெளியாகியுள்ளன. அவை அனைத்துமே ஒரே கதையை மட்டுமே, வெவ்வேறு கோணங்களில் கூறி வந்தன. அந்த வரிசையில் கல்கி திரைப்படமும் மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட ஒரு கதைக்களத்தை கொண்டுள்ளது. குருக்‌ஷேத்ரா போரின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே எடுத்துக்கொண்டு இந்த பிரமாண்ட திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால், கல்கி திரைப்படத்தை கட்டாயம் ஏன்  திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் என்பதற்கான சில காரணங்களை இங்கே விவரித்துள்ளோம். படம் பார்க்காதவர்கள் ஸ்பாய்லர்கள் வேண்டாம் என கருதினால், இத்தோடு இந்த செய்தியை தவிர்ப்பது நல்லது.

நுட்பமான கதை:

இந்தியாவில் மகாபாரத கதையை அறியாதோரும், அதில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றி விவாதிக்காத நபர்களும் மிகக்குறைவே. அதில் கூறப்பட்டதை போன்று விஷ்ணுவின் கடைசி மற்றும் பத்தாவது அவதாரமான கல்கி தோன்றுவது,  மகாபாரதத்தில் இடம்பெற்ற சில முக்கிய கதாபத்திரங்களின் நீட்சி மற்றும் எதிர்கால பேரழிவு ஆகியவற்றை இணைத்து, இந்த கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய ரசிகர்களை நிச்சயம் இந்த கதைக்களம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

வில்லன்களை ஹீரோக்களாக மாற்றிய கல்கி:

அஸ்வத்தாமன் கதாபாத்திரம், வயிற்றில் உள்ள ஒரு சிசுவையே கொல்ல முயன்றதால் மரணமே இல்லை என்ற சாபத்தை பெற்றார் எனக் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் இடம்பெற்ற  முக்கிய வில்லன்களில் ஒருவராக கருதப்படும் அவர் இன்றளவும் நம்மிடையே வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. அப்படி இருக்கையில் அவருக்கான சாப விமோச்சனம் என்னவாக இருக்கும், அவர் எந்த அளவிற்கு வலிமையானவர் என்பதை காட்டி, விஷ்ணு அவதாரத்தையே காக்கும் பொறுப்பை  வழங்கி, கல்கி கதையின் மிக முக்கிய நாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

மறுமுனையில் பெரு வள்ளலான கர்ணனும், துரியோதனன் பக்கம் இருந்ததால் வில்லனாகவே பார்க்கப்படுகிறார். ஆனாலும்,  அவருக்கு நேர்ந்த மரணம் மகாபாரதம் படித்தவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். அவருக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து இருக்கலாமே,  மன்னிக்கப்பட்டு இருக்கலாமே என எண்ணியோர் பலர். இந்நிலையில் தான், கர்ணனுக்கான சரியான அங்கீகாரம் கல்கி படத்தில் வழங்கப்பட்டுள்ளது. புராணக்கதையில் முக்கிய வில்லன்களாக இருந்த கர்ணன் மற்றும் அஸ்வத்தாமன் கதாபாத்திரங்கள், கல்கி படத்தில் சூப்பர் ஹீரோக்களாக மாற்றப்பட்டுள்ளது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பதே உண்மை.

தொழில்நுட்ப ரீதியில் வலுவான படம்:

முதலில் இப்படிப்பட்ட கதைக்களத்தை கொண்ட படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பு நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். 600 கோடி ரூபாய் செலவில் அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ், தீபிகா படுகோனே பெரும் நட்சத்திரங்களை இணைத்து இந்த படம் உருவாகி உள்ளது. ஆதிபுருஷ் போன்ற படங்கள், கிராபிக்ஸ் போன்றவற்றிற்காக கடுமயாக விமர்சிக்கப்பட்டன. ஆனால், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தியாவிலும் படங்களை எடுக்க முடியும் என, கல்கி பட இயக்குனர் நாக் அஷ்வின் நிரூபித்துள்ளார். படத்தின் ப்ரோடக்‌ஷன் டிசைனர் நிதின் ஜிகானி மற்றும் ஒளிப்பதிவாளர் Djordje Stojiljkovic இருவரும் தங்கள் அசாத்திய உழைப்பால் இயக்குனரின் கனவுகளுக்கு உயிர் அளித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாகவும் நம்பும்படியாகவும் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுளன. பிரமாண்ட சிலைகள், பறக்கும் வாகனங்கள், கோட்டைகள், வறண்ட பூமி ஆகியவை, பேரழிவுக்குப் பிறகு பூமி இப்படி தான் இருக்கும்போல என்ற எண்ணத்தை நமக்கே தருகிறது.

பன்முகத்தன்மை:

ஹாலிவுட்டில் பல படங்களில் பேரழிவிற்கு பிறகான உலகத்தை காட்டி இருப்பார்கள். பெரும்பாலும் அதில் வெள்ளையர்கள் மட்டுமே தப்பி பிழைத்து வாழ்வதாக காட்டப்பட்டு இருக்கும். ஆனால், பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவை கதைக்களமாக கொண்டிருக்கும்போது, அது எளிதானதல்ல. அதனை உணர்ந்த இயக்குனர் தமிழர்கள், தெலுங்கர்கள், பஞ்சாப் மக்கள், வடநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என பலரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்வதை போன்று வடிவமைத்துள்ளார். இந்த முயற்சி இந்தியாவின் பன்முகத்தன்மை கதைக்களத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. இதற்கான கலாச்சார பிரதிபலிப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு ஆகியவற்றிற்காக, படக்குழுவின் மெனக்கெடல் பாராட்டுதலுக்குரியதே.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
2025ம் ஆண்டின் சிறந்த இரவு.. கோலியின் கையில் ஐபிஎல்.. RCB ரசிகர்களின் 18 வருட ஏக்கம்!
Embed widget