மேலும் அறிய

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவி ‛பார்ட்’ முடிந்துவிட்டதாம்!

தமிழில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்தன.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கிறார். அருள்மொழி வர்மன்தான் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் பின்னாட்களில் ராஜா ராஜா சோழன். இரு பாகங்களாக வெளியாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக தங்களது பகுதிகள் நிறைவடைந்ததும் ஊருக்கு திரும்புகின்றனர். இரு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் மும்பை திரும்பி இருந்தார்.

தற்போது திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்தில் நடிக்கும் ஜெயம் ரவி தனது காட்சிகள் முடிந்து மத்திய பிரதேசத்தில் இருந்து ஊருக்கு திர்பியிருக்கிறார். திரும்பியவர் தனது அம்மாவின் பிறந்த தினமான இன்று அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்லி சில பொன்னியின் செல்வன் குறித்த டீவீட்களை பெயர் குறிப்பிடாமல் எழுதியுள்ளார்.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவி ‛பார்ட்’ முடிந்துவிட்டதாம்!

அவரது டீவீட்டில், "இப்படி ஒரு மேக்னம் ஓபஸை தலைமைதாங்கியதை அருகிலிருந்து காணும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி, அருகிலிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம்" என ஒரு டீவீட்டிலும், "தங்களது ஆசிர்வாதத்திற்கும், நகைச்சுவைக்கும், அன்பான இயல்புக்கும் நன்றி" என்று ட்வீட் செய்துள்ளார். அதனை தொடர்ந்து, அந்த திரைப்படத்தின் தான் சம்மந்த பட்ட காட்சிகள் படமாக்க பட்டு முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மணிரத்னத்தின் செட்டில் இருந்ததை தற்போது மிகவும் மிஸ் செய்வதாகவும், மீண்டும் மணிரத்னத்துடன் வேலை செய்ய காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இட்டுள்ள டீவீட்டில் எங்கும் மணிரத்னம் எனும் பெயரோ, பொன்னியின் செல்வன் என்னும் பெயரோ இடம்பெறவில்லை. "ஒரு திரைப்படம் அல்ல, இரு திரைப்படங்களின் படப்பிடிப்பு முடிந்துள்ளது" என்று சூசகமாக இரு பாகங்களாக வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வனை குறிப்பிட்டுள்ளார்.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன்: ஜெயம் ரவி ‛பார்ட்’ முடிந்துவிட்டதாம்!

இத்திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தழுவல் ஆகும். கல்கியின் நாவல், தென்னிந்தியாவின் ஆளுமைமிக்க மன்னர்களுள் ஒருவரான அருள்மொழி வர்மனின் ஆரம்ப கால கதைகளை பேசுகிறது. பிற்காலங்களில் ராஜராஜ சோழன் என்று அறியப்பட்டவர் தான் அருள்மொழி வர்மன். இதை திரைப்படமாக்க தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பலர் முயன்றிருந்தாலும், ஒருவழியாக மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரித்து இயக்கிவருகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மணிரத்னத்துடன் இணைந்து இளங்கோ குமரவேலும், எழுத்தாளர் ஜெயமோகனும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இதற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் பணிபுரிகிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

கடைசியாக ஜெயம்ரவிக்கு பூமி திரைப்படம் ஹாட்ஸ்ட்டாரில் வெளியாகி இருந்தது. இயற்கை விவசாயத்தை பற்றி பேசும் அப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கலமிறங்கியுக்கும் வித்தியாச கதைகளம் என்பதால், ஜெயம் ரவி ரசிகர்களும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
தயாரிப்பாளர் இல்லாமல் அஜித் குமார்...ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சகோதரர் அனில் குமார் !
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
சினிமா நிகழ்ச்சிகளில் எங்களை ஆபாசமாக படம்பிடிக்கிறார்கள்..காந்தாரா பட நடிகை குற்றசாட்டு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
நாங்குநேரி தாக்குதல் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
சொந்த ஊர் மக்களுக்காக விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷன் - அப்படி என்ன சொன்னார்?
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Embed widget