Ponniyin Selvan: சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேனா..? ஜெயம் ரவி விளக்கம்!
Ponnyin Selvan : விரைவில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி அளித்த விளக்கம்

பொன்னியின் செல்வன்
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல மில்லியன் வியூவ்ஸ்களை கடந்துள்ளது.முன்னதாக வெளியான சோழா சோழா பாடலும், பொன்னி நதி பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்தடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
View this post on Instagram
அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி:
பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிகர்கள் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். இவ்வகையான முக்கிய கதாப்பாத்திரங்களிள் ஒருவராக வருகிறார், நடிகர் ஜெயம் ரவி. அருண் மொழி வர்மனாக இப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, பொன்னியின் செல்வன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில், இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் ஜெயம் ரவி,கார்த்தி, பார்த்திபன் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், “பொன்னியின் செல்வன் படத்தில் சிம்பு நடித்தால், ‘நான் நடிக்க மாட்டேன்’ என்று நீங்கள் கூறியதாக கருத்து நிலவி வருகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிரீர்கள் என்ற ஜெயம் ரவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ஜெயம் ரவி, ‘நச்’ என்ற ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
“படத்தில் சிம்பு நடித்தால்..”
சிலம்பரசன் நடித்தால் ஜெயம் ரவி நடிக்க மாட்டார் என்று சொன்னதாக தகவல் வெளியாது. இதற்கு நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்தார். பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஜெயம் ரவி, “சிலம்பரசன் போன் பண்ணி, நான் படத்துல இருக்கேன் தெரிஞ்சா முதல்ல சந்தோஷப்படுறது நீதான். அதனால் தேவையில்லாமல் இவர்கள் சொல்வதை கேட்காதே” என்று கூறினார் என நடிகர் ஜெயம் ரவி விளக்கம் அளித்தார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















