மேலும் அறிய

Kalaimamani Award: “தகுதியானவர்களுக்கே கலைமாமணி விருது? குழுவை மாற்றியமைக்கலாம்” - உயர்நீதிமன்ற மதுரைகிளை அதிரடி

தேவையிருப்பின் கலைமாமணி விருது குழுவை மாற்றி அமைக்கலாம் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

நெல்லையை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் 2019-2020ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அப்போது தகுதியில்லாத பலருக்கு விருது வழங்கப்பட்டதோடு, அதற்கான சான்றிதழில் உறுப்பினர், செயலர் உள்ளிட்டோரின் கையொப்பம் கூட இன்றி அவசர கதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியில்லாத நபர்களுக்கு  வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.

நீதிபதிகள் காட்டம்:

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்குகிறீர்கள்? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்? என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது எனவும்,  கலை பற்றி தெரியாதவர்களுக்கு எல்லாம் கலைமாமணி விருது வழங்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். சாதனைகள் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது தற்போது 2 படங்களில் நடித்தவர்களுக்கு எல்லாம் வழங்கப்படுகிறது எனவும் சாடினார். தற்போதைய நிலையே நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.  2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், அடுத்து வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா & கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அரசு தரப்பு விளக்கம்:

இதையடுத்து, 2019-20ம் ஆண்டில் தகுதியான நபர்களுக்கு தான் விருதுகள் வழங்கப்பட்டனவா என்பது குறித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு வெளியீடு:

இந்நிலையில் நீதிபதிகள் மகாதேவன், மற்றும் சத்திய நாரயண பிரசாத் ஆகியோர் சேர்ந்து தீர்ப்பை வெளியிட்டனர். அதில், 2019-2020ம் ஆண்டில்  தகுதியானவர்களுக்கு தான்  கலைமாமணி விருது  வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பின் தேர்வுக்குழுவை மாற்றியமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு,  தேவை இருப்பின் விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு  சமமான வாய்ப்பு வழங்கவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்தது.

கலைமாமணி விருது:

இயல், இசை, நாடக மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு,  தமிழ்நாடு அரசு  கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி”, 19 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு “கலை வளர்மதி”, 36 முதல் 50 வயது வரையினாவர்களுக்கு “கலை சுடர்மணி”, 51 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு  “கலை நன்மணி” மற்றும் 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு “கலை முதுமணி” என, 5 பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது வழங்குவதற்கு என வயது வரம்பு, தகுதி மற்றும்  நெறிமுறை என எதுவும்  இதுவரை வகுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
அமைச்சரான பிறகு சூப்பர் ஸ்டாரை சந்தித்த வன்னி அரசு... “நிறைய மக்களுக்கு செய்யுங்கள்” என வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
நடிகர் கிருஷ்ணாவின் மைல்கல் படமான 'மர்டர் இன் டவுன்’
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget