மேலும் அறிய

Kriti Verma: ரூ.264 கோடி பணமோசடி புகார்.. அமலாக்கத்துறை விசாரணையில் பிக்பாஸ் போட்டியாளர் க்ரீத்தி வர்மா

பிக்பாஸ் போட்டியாளர் க்ரீத்தி வர்மாவிடம் ரூ.264 கோடி பணமோசடி புகாரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பணமோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் உடன் தொடர்பில் இருந்ததாக, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதுதொடர்பான பரபரப்பு முழுமையாக ஓய்வதற்கு முன்பாகவே, மேலும் ஒரு நடிகையிடம் பணமோசடி புகாரில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.  அந்த நடிகை ரோடீஸ் மற்றும் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 12 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, நடிகை க்ரீத்தி வர்மா தான்.

க்ரீத்தி வர்மா:

வருமான வரித்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த க்ரீத்தி வர்மா, நடிப்பின் மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக, தனது பணியை துறந்துவிட்டு படத்தில் நடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில் முதலில் அவர், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி, ரோடிஸ் மற்றும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். இதன் மூலம் வெகுஜன மக்களிடம் அறிமுகமானார். இந்நிலையில் தான், க்ரீத்தி வர்மா மீது பண மோசடி புகார் எழுந்துள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

மும்பை வருமான வரித்துறையில் கணக்குகளை தாக்கல் செய்து வரி விலக்கு பெறுவதில் ரூ.264 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. அதனடிப்படையில் அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். புகார் தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்க துறையினரும் தனித்தனியாக விசாரணையை தொடங்கினர். இதில் க்ரீத்தி வர்மா வருமான வரித்துறையில் பணிபுரிந்த போது, போலியான ஆவணங்களை சமர்பித்து வரி விலக்கு பெற்ற குற்றவாளிகளுக்கு துணை போனதாக கூறப்பட்டது. 2007-08, 2008-09 நிதியாண்டுகளுக்கான வரி விலக்குகளை பெறும் சமயத்தில் தான் இந்த நிதி மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு பெறப்பட்ட நிதி ஷெல் நிறுவனங்கள் மற்றும் பூஷன் பாட்டில் உள்ளிட்ட பலரது வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை:

இந்த சந்தேகங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக, மும்பை தொழில் அதிபர் பூசன் பாட்டீல் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பணம் நடிகை க்ரீத்தி வர்மா வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்தது. தொடர்ந்து, அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டிஸ் அடிப்படையில், ரூ.263 கோடி பண மோசடி புகாரில் க்ரீத்தி வர்மா நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

குற்றவாளியுடன் தொடர்பில் இருந்தேன்:

குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசிய க்ரீத்தி வர்மா, “பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் பூசன் பாட்டீலுடன் ஆரம்பத்தில் தொடர்பில் இருந்தேன்.  நான் பங்கேற்ற நடன நிகழ்ச்சிக்காகவே அவர் பணம் கொடுத்தார். ஆனால், பூசன் பாட்டில் பண மோசடி புகாரில் சிக்கி இருப்பது தெரியவந்ததும் அவருடான தொடர்பை கைவிட்டுவிட்டேன்” என விளக்கமளித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget