மேலும் அறிய

ABP Nadu Exclusive: 11 ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறதா கொலை மிரட்டல்? அஜித் ரசிகர்கள் மீது ஜாக்குவா் தங்கம் புகார்!

11 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு, இன்றும் அஜித் ரசிகர்களிடம் மிரட்டல் வருகிறது என்று சண்டைப்பயிற்சியார் புகார் செய்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் அஜித்தில் ரசிகர்களால் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லையே...? புகாருக்கு என்ன காரணம் என ‛பேக் பைலை’ புரட்டினால் ஒரே அதிர்ச்சி, அது 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தின் விட்ட குறை, தொட்டக்குறை. 

நடிகர் அஜித் நிஜத்தில் செய்த பல சம்பவங்களில் மிக முக்கியமானது, 2010ல் அன்றை முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித், நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும், எங்கள் தொழிலை செய்ய விடுங்கள்...’ என்று முதல்வர் கருணாநிதி முன்பு தில்லாக பேசினார். அஜித்தின் அந்த பேச்சை, விழாவில் பங்கேற்ற அனைவரும் பாராட்டினர். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எழுந்து நின்று அஜித்தின் பேச்சுக்கு கைதட்டி ஆதரவு அளித்தார்.


ABP Nadu Exclusive: 11 ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறதா கொலை மிரட்டல்? அஜித் ரசிகர்கள் மீது ஜாக்குவா் தங்கம் புகார்!

இந்த சம்பவத்தை நாடே அறியும். இந்த சம்பவத்தின் தொடர்ச்சி தான், தற்போது வரை நீட்சியாக நடந்து கொண்டிருப்பதாக ஜாக்குவார் தங்கம் தரப்பின் புகாரின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அஜித் மேடையில் பேசிய பின், அது தொடர்பாக அன்றைய தினம் கருத்து தெரிவித்திருந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், ‛‛எங்கிருந்தோ பிழைக்க வந்த அஜித் போன்றவர்கள், மனம் போன போக்கில் பேசக்கூடாது. அவரது பேச்சுக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்று பேட்டியளித்தார். இது அன்றைய தினம் அஜித் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

11 ஆண்டுகளுக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்:


ABP Nadu Exclusive: 11 ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறதா கொலை மிரட்டல்? அஜித் ரசிகர்கள் மீது ஜாக்குவா் தங்கம் புகார்!

2010 பிப்ரவரி 17 அன்று இரவு, சென்னை கே.கே.நகரில் உள்ள ஜாக்குவார் தங்கத்தின் வீட்டில் திரண்ட அஜித் ரசிகர்கள், அவரது காரை அடித்து நொறுக்கினர். அந்த நேரத்தில் ஜாக்குவார் தங்கம் வீட்டில் இல்லாததால், அவர் தப்பித்தார். அதன் பிறகு பேட்டியளித்த ஜாக்குவார் தங்கம், ‛அஜித் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது... அவரை யார் மிரட்டினார்கள் என்று வெளிப்படையாக பேச வேண்டும்,’ என்றெல்லாம் அடுத்தடுத்த பேட்டிகளில் கூறினார். இதனால் அஜித் ரசிகர்களால் அவர் பல்வேறு மிரட்டல்களை சந்தித்தார். அதன் பின் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, ஜெயலிதா முதல்வரானார். அரசியல், சினிமா எல்லாமே மாறியது. 

11 ஆண்டுகளுக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டர்:
ABP Nadu Exclusive: 11 ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறதா கொலை மிரட்டல்? அஜித் ரசிகர்கள் மீது ஜாக்குவா் தங்கம் புகார்!

இந்த நிலையில் தான் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாக்குவார் தங்கம் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், ‛தான் 1600 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருப்பதாகவும், தனக்கு மொபைல் போனில் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரபரப்புகின்றனர் என்றும், நடிகர் அஜித்திற்கும் எனக்கும் தகராறு இருப்பது போல பொய்யான தகவல் பரபரப்பப்படுவதாகவும் கூறியுள்ள ஜாக்குவார் தங்கம், அஜித் ரசிகர்களை எனக்கு எதிராக தூண்டிவிடுபவர்கள் மீதும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு,’ அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு, இன்றும் அஜித் ரசிகர்களிடம் மிரட்டல் வருகிறது என்று சண்டைப்பயிற்சியார் புகார் செய்திருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
டிட்வா புயல் கனமழை... மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் சிறப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் பாராட்டு
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
சபரிமலை: 15 நாட்களில் ₹92 கோடி வருவாய்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு, சாதனை படைத்த தேவசம் போர்டு!
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Watch Video: நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப்பாதையில் நடந்து வந்த பயணிகள் - காலையிலே திக்.. திக்..!
Embed widget