மேலும் அறிய

Sai Pallavi: பெண்களுக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா...வெறுப்பை உமிழ்பவர்கள் தான் இங்கே ஹீரோக்கள்... திவ்யா ஸ்பந்தனா ஆதங்கம்!

”ஒருவர் 'அன்பாக இருங்கள், நல்ல மனிதனாக இருங்கள்' என்று சொன்னால் அவர் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார். வெறுப்பை உமிழ்பவர்கள் உண்மையான ஹீரோக்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்."

நடிகை சாய் பல்லவியின், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறித்த கருத்து, சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு ஆதரவுக் குரல்களும் எதிர்ப்பு குரல்களும் மாறி மாறி எழுந்து வருகின்றன. 

சாய் பல்லவி ராணாவுடன் தான் நடிக்கும் ’விராட பர்வம்’ எனும் திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணிகளின்போது, இந்தக் கருத்தை தெரிவித்த நிலையில் அவருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Sai Pallavi: பெண்களுக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா...வெறுப்பை உமிழ்பவர்கள் தான் இங்கே ஹீரோக்கள்... திவ்யா ஸ்பந்தனா ஆதங்கம்!

ஆதரவு தெரிவித்த திவ்யா ஸ்பந்தனா

இச்சூழலில், ’குத்து’, ’பொல்லாதவன்’ படங்களில் நடித்த நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான திவ்யா ஸ்பந்தனா, சாய் பல்லவிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

”சாய் பல்லவிக்கு எதிராக வரும் ட்ரோலிங் மற்றும் மிரட்டல்களை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அப்படி இருக்க பெண்களுக்கு மட்டும் உரிமை இல்லையா? எந்த ஒரு நல்ல மனிதரும் ஒடுக்கப்பட்டவர்களைக் காக்க என்ன சொல்வாரோ அதை தான் சாய் பல்லவி சொல்லி உள்ளார்.

 

 

'நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்?’


Sai Pallavi: பெண்களுக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா...வெறுப்பை உமிழ்பவர்கள் தான் இங்கே ஹீரோக்கள்... திவ்யா ஸ்பந்தனா ஆதங்கம்!

இன்றைக்கு ஒருவர் 'அன்பாக இருங்கள், நல்ல மனிதனாக இருங்கள்' என்று சொன்னால் அவர் தேசவிரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார். வெறுப்பை உமிழ்பவர்கள் உண்மையான ஹீரோக்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நாம் எப்படிப்பட்ட தலைகீழான உலகில் வாழ்கிறோம்? " என திவ்யா ஸ்பந்தனா ட்வீட் செய்துள்ளார்.

காஷ்மீர் ஃபைல்ஸில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட சம்பவம், மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ’ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல வைத்த சம்பவம் இரண்டுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை என நடிகை சாய் பல்லவி முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

சாய் பல்லவியின் கருத்து

“என்னை பொருத்தவரை வன்முறை என்பது ஒரு தவறான விஷயம். நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியரை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே வேறு வேறு அல்ல.

இங்கு வலது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள் இடது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் சரி, யார் தவறு எனக்கு தெரியாது. நீங்கள் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் யார் சரியாக இருக்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.”என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சாய் பல்லவியின் இந்தக் கருத்து நேற்று முதல் சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget