மேலும் அறிய

Rajakumaran: நான் ஒரு சத்ரியன்.. தேவயானி விரும்புனாங்க.. கோயில்ல தாலி கட்டினேன்.. ராஜகுமாரன் ஓபன் டாக்!

ஒரு பெண் திருமணம் செய்துக் கொள்ள தகுதியான நபரை ஏற்றுக்கொண்டு தயாராகும்போது வீட்டில் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அப்பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அது ஒரு சத்ரியனின் கடமை என ராஜகுமாரன் கூறியுள்ளார்.

என்னதான் பிரபலமானவராக இருந்தாலும், தேவயானியுடன் நடைபெற்ற அவசர திருமணம் பற்றி இயக்குநர் ராஜகுமாரன் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 

நீ வருவாய் என, காதலுடன், விண்ணுக்கும் மண்ணுக்கும், திருமதி தமிழ் என பல படங்களை இயக்கியுள்ள ராஜகுமாரன், நடிகை தேவயானியின் கணவராக அறியப்படுகிறார். சில படங்கள் நடித்திருக்கும் அவர், சமீபகாலமாக பல நேர்காணல்களில் அதிர வைக்கும் வகையில் கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு நேர்காணலில் பேசிய ராஜகுமாரனிடம், நீங்கள் நிறைய படம் உதவி இயக்குநராக வேலை பார்த்து விட்டு இயக்குநராக மாறினீர்கள். தேவயானிக்கு ஷூட்டிங்கில் டயலாக் எல்லாம் சொல்லி கொடுத்து இருப்பீர்கள். அப்புறம் ஏன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டீர்கள்? என கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “ஒரு பெண் திருமணம் செய்துக் கொள்ள தகுதியான நபரை ஏற்றுக்கொண்டு தயாராகும்போது வீட்டில் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அப்பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அது ஒரு சத்ரியனின் கடமை. நான் பிறப்பால் ஒரு சத்ரியன். இந்த மண்ணின் மைந்தன். கோயிலுக்கு சென்று திருமணத்திற்கு முன்னால் கூட கேட்டேன். நாம் நிஜமாக திருமணம் செய்ய வேண்டுமா?, இல்லை சாமி கும்பிட்டு விட்டு சென்று விடலாமா? என கேட்டேன். தேவயானி என்னை பார்த்து மொறைத்தார். அதெல்லாம் இல்லை கல்யாணம் செய்ய வேண்டும் என சொன்னார். நான் அவருக்கு அளிக்கும் சுதந்திரத்தை சொல்கிறேன். திருமணம் செய்வதற்கு 10 நிமிடங்கள் முன்னால் கூட கேட்டேன்” என ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். 

அடையாளம் கொடுத்த சினிமா

எனக்கு சினிமா நிறைய கொடுத்தது. உலகின் எந்த மூலைக்கு போனாலும், பெரிய மனிதர்கள் என்னை தெரிந்து வைப்பதற்கான அடையாளத்தை சினிமா கொடுத்தது. பணத்தை எதிர்பார்த்து நான் எதுவும் செய்யவில்லை. பணம் கொடுத்தால் நான் வேலை செய்வேன் என்பதெல்லாம் இல்லை. மனம் விரும்பினால் மட்டுமே அதை செய்வேன். இப்போது இயற்கையான பொருட்கள் விற்பனை கூட பணத்திற்காக செய்யவில்லை.

நான் அதிகமாக தேவயானியின் கணவர் என அறியப்பட்டாலும், இயக்குநர் ராஜகுமாரனாகவும் பார்க்கப்படுகிறேன். இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அதில் எந்த பிரச்னையும் இல்லை. இனியா அப்பா, பிரியங்கா அப்பா என நாளை சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. பள்ளியில் கூட தேவயானியை இனியாவின் அம்மா என்று தான் கூறுகிறார்கள். ஆனால் இதை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கடுமையாக கண்டித்தார். 

ஒருமுறை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கிருந்த நிர்வாகியிடம் இது யார் என தெரியுமா என என்னை கைக்காட்டி அவர் கேட்டார். அந்த நபர் தேவயானி கணவன், நன்றாக தெரியும் என சொல்ல, அவ்வளவு தான் ஆர்.பி.சௌத்ரிக்கு கோபம் வந்து விட்டது. முதலில் இயக்குநர் ராஜகுமாரன், அப்புறம் தான் தேவயானி கணவர். நம்ம கம்பெனியில் தான் முதல் படம் பண்ணினார் என என்னைப் பற்றி பெருமையாக கூறினார் என ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget