தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
நடிகர் தனுஷ் கட்சி தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷாலும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது.

தமிழ்நாட்டில் இனி திராவிடம் இங்கே தலை எடுக்காது. இது ஆன்மீக மண் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
ஆட்டத்தை மாற்றிய தவெக வெற்றி
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தவெகவின் இந்த வெற்றி அரசியலில் மாற்றமே நிகழாது என நம்பியவர்களின் எண்ணங்களில் மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. பலரும் அரசியல் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர். அந்த வகையில் அண்ணாமலை விரைவில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
அடுத்ததாக நடிகர் தனுஷ் கட்சி தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஷாலும் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து வருகிறது. தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு தேசிய விருதை அறிவித்தது சர்ச்சையை கிளப்பியது. விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை களமிறக்கி மக்களின் எண்ணத்தை அறியவுள்ளதாக கூறப்படுகிறது.
இவங்க எல்லாரும் பித்து புடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டாங்க... இனி திராவிடம் இங்கே தலை எடுக்காது.. இது ஆன்மீக மண்.. உங்க ஆட்டம் எல்லாம் முடிந்தது.. இனி கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. வெற்றிமாறன் சார் முருகன் படம் எடுத்து தான் ஆகனும்.. ஓம், நமச்சிவாய போன்ற தலைப்புகள் வரும்.. https://t.co/Ad9uiK96Sm
— Mohan G (@mohandreamer) July 26, 2026
எழுத்தாளர் சூர்யா சேவியர் பதிவு
இதனிடையே எழுத்தாளரனா சூர்யா சேவியர் வெளியிட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவில், “ஜோசப் விஜய்+அண்ணாமலை+ தனுஷ் (ரஜினி குடும்பத்தார் ஆதரவு) ஆகிய மூவரும் மாற்று முகங்களுடன் மறைமுகமாக ஒன்றிணைந்து நடத்தும் மும்முனைத்தாக்குதலில் தான் அடுத்து தமிழ்நாடு அரசியல் களம் நகரப்போகிறது. தேசிய விருதுகளும், ஓம் என்ற தலைப்புகளும் தற்செயலானது அல்ல. பெரும் மக்கள்திரள் விளக்குகளைக் காட்ட தனுஷ் ஆடும் இதுபோன்ற காட்சிகள் மூலம் மக்களின் மனங்களில் ஒரு உளவியல் தாக்குதல் தொடங்கப்படுகிறது.
திராவிடம், தமிழ்நாடு என்ற தன்னுணர்வும், இந்த உணர்வுக்கு அடிப்படையான டில்லி எதிர்ப்பும் இங்குள்ள மக்களின் அடிநாதமாக இருக்கிறது. இதை சிதைக்காமல் முன்னேற வாய்ப்பில்லை. தமிழர்களின் சினிமா மோகம்+ ஒன்றிய அதிகாரம்+ வாக்கு இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விஜய் எனும் கோமாளி மூலம் முதல் இலக்கை அடைந்துவிட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read: Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
இதற்கு பதில் கொடுத்துள்ள இயக்குநர் மோகன் ஜி, “இவங்க எல்லாரும் பித்து புடிச்சி அலைய ஆரம்பிச்சிட்டாங்க... இனி திராவிடம் இங்கே தலை எடுக்காது.. இது ஆன்மீக மண்.. உங்க ஆட்டம் எல்லாம் முடிந்தது.. இனி கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.. வெற்றிமாறன் சார் முருகன் படம் எடுத்து தான் ஆகனும்.. ஓம், நமச்சிவாய போன்ற தலைப்புகள் வரும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















