மேலும் அறிய

Rajinikanth: தலைவர் என்றும் வேற லெவல்.. 15 பேருக்காக ரஜினிகாந்த் நடித்த படம்!

இத்தனை ஆண்டுகள் கூட இருந்து பணியாற்றியவர்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தேன். நாம படம் பண்ணவில்லை என்ற போது சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நடிகர் ரஜினிகாந்த் பாண்டியன் படத்தில் நடித்ததற்கு பின்னால் பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது. அதனைப் பற்றி காணலாம். 

கடந்த 1992 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி, ராதா ரவி, பிரதாப    சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் வெளியான படம் பாண்டியன். இளையராஜா பாடல்களுக்கும், கார்த்திக் ராஜா பின்னணி இசையும் இப்படத்துக்கு அமைத்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. 

இந்நிலையில் இந்த படம் உருவானதற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. இதனை நேர்காணல் ஒன்றில் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்திருந்தார். அதாவது, “பாண்டியன் படத்தை எனக்காக மட்டும் ரஜினி பண்ணிக் கொடுக்கவில்லை. என்னுடன் 15 பேர் இருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் கூட இருந்து பணியாற்றியவர்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தேன். நாம படம் பண்ணவில்லை என்ற போது சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான ஓய்வூதியமோ, எந்த பண பலன்களோ கிடைக்காது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினியிடம் கேட்டேன். அவரும் சரி என சொல்லி விட்டார். 

ரிலீசுக்கு 10 நாட்களுக்கு முன்பு என்னுடைய துணைவியார் இறந்து விட்டார். அதிலிருந்து 3வது நாள் பட வேலைகளை நான் தொடங்கி விட்டேன். ஒருவேளை சொன்ன தேதியில் படம் ரிலீசாகவில்லை என்றால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதை ஏவிஎம் சரவணன் சார் கணக்கிட்டு சொன்னார். நான் அவரிடம் என்னோட மனைவி கூட நஷ்டம் ஏற்படுவதை விரும்ப மாட்டார். அதனால் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் செய்து விடலாம் எனவும் கூறிவிட்டேன். 

ரஜினியும் சிங்கப்பூரில் இருந்து பேசி படத்தை தள்ளி வைக்கலாம் என சொன்னார். நஷ்டம் ஏற்பட்டால் அடுத்த படத்தில் சரி பண்ணிவிடலாம் என சொன்னார். நான் இல்லை ரஜினி, எல்லா படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்துவிட்டு நம்ம படம் பண்ணவில்லை என்றால் விநியோகஸ்தர்கள் கஷ்டப்படுவார்கள். என் மனதையும், துக்கத்தையும் கட்டுப்படுத்தி ரிலீஸ் செய்கிறேன் என சொன்னேன். திட்டமிட்டபடி படம் வெளியாகி அதில் வந்த லாபம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றைக்கு அனைவரும் அடிப்படை வசதிகளோடு இருப்பதற்கு காரணம் ரஜினி தான்” என எஸ்.பி.முத்துராமன் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தொட்டில் குழந்தை என்ற படத்தை எடுத்து அத்துடன் சினிமாவில் இருந்து எஸ்.பி.முத்துராமன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget