மேலும் அறிய

Rajinikanth: தலைவர் என்றும் வேற லெவல்.. 15 பேருக்காக ரஜினிகாந்த் நடித்த படம்!

இத்தனை ஆண்டுகள் கூட இருந்து பணியாற்றியவர்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தேன். நாம படம் பண்ணவில்லை என்ற போது சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

நடிகர் ரஜினிகாந்த் பாண்டியன் படத்தில் நடித்ததற்கு பின்னால் பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது. அதனைப் பற்றி காணலாம். 

கடந்த 1992 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி, ராதா ரவி, பிரதாப    சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் வெளியான படம் பாண்டியன். இளையராஜா பாடல்களுக்கும், கார்த்திக் ராஜா பின்னணி இசையும் இப்படத்துக்கு அமைத்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. 

இந்நிலையில் இந்த படம் உருவானதற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. இதனை நேர்காணல் ஒன்றில் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்திருந்தார். அதாவது, “பாண்டியன் படத்தை எனக்காக மட்டும் ரஜினி பண்ணிக் கொடுக்கவில்லை. என்னுடன் 15 பேர் இருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் கூட இருந்து பணியாற்றியவர்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தேன். நாம படம் பண்ணவில்லை என்ற போது சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான ஓய்வூதியமோ, எந்த பண பலன்களோ கிடைக்காது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினியிடம் கேட்டேன். அவரும் சரி என சொல்லி விட்டார். 

ரிலீசுக்கு 10 நாட்களுக்கு முன்பு என்னுடைய துணைவியார் இறந்து விட்டார். அதிலிருந்து 3வது நாள் பட வேலைகளை நான் தொடங்கி விட்டேன். ஒருவேளை சொன்ன தேதியில் படம் ரிலீசாகவில்லை என்றால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதை ஏவிஎம் சரவணன் சார் கணக்கிட்டு சொன்னார். நான் அவரிடம் என்னோட மனைவி கூட நஷ்டம் ஏற்படுவதை விரும்ப மாட்டார். அதனால் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் செய்து விடலாம் எனவும் கூறிவிட்டேன். 

ரஜினியும் சிங்கப்பூரில் இருந்து பேசி படத்தை தள்ளி வைக்கலாம் என சொன்னார். நஷ்டம் ஏற்பட்டால் அடுத்த படத்தில் சரி பண்ணிவிடலாம் என சொன்னார். நான் இல்லை ரஜினி, எல்லா படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்துவிட்டு நம்ம படம் பண்ணவில்லை என்றால் விநியோகஸ்தர்கள் கஷ்டப்படுவார்கள். என் மனதையும், துக்கத்தையும் கட்டுப்படுத்தி ரிலீஸ் செய்கிறேன் என சொன்னேன். திட்டமிட்டபடி படம் வெளியாகி அதில் வந்த லாபம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றைக்கு அனைவரும் அடிப்படை வசதிகளோடு இருப்பதற்கு காரணம் ரஜினி தான்” என எஸ்.பி.முத்துராமன் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தொட்டில் குழந்தை என்ற படத்தை எடுத்து அத்துடன் சினிமாவில் இருந்து எஸ்.பி.முத்துராமன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை ஓரம்கட்டிய கட்டா குஸ்தி 2 படக்குழு..பாராட்டுக்களை சுருட்டிய விஷ்ணு விஷால்
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
Actress Uma: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட பிரபல நடிகை.. சிகிச்சையின்போது வெளியான புகைப்படம்!
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
அஜித் படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி !
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!
CM Vijay: பாலையா, சிரஞ்சீவி பேச்சு கேவலமா இருக்கும்.. விஜய் அரசியல் சூப்பர்.. நடிகை ரோஜா புகழாரம்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget