மேலும் அறிய

அந்த போலீஸ் வன்னியரா? ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் - வன்னியர் சங்கத் தலைவர்

"வன்னியர்களின் அடையாளமான அக்னிக் கலசம் இடம் பெற்ற வன்னியர் சங்க நாட்காட்டி திட்டமிட்டே வைக்கப்பட்டுள்ளது"

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக படக்குழு அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், காவல் அதிகாரியின் பெயரை அனைத்துக் காட்சிகளிலும் மாற்ற வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இருளர் சமுதாயத்து அப்பாவி இளைஞர் ஒருவர் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்டதையும், அந்த இளைஞரின் மனைவி போராடி நீதி பெற்றதையும் அடிப்படையாக வைத்து 'ஜெய்பீம்' என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவது தான் இந்தத் திரைப்படத்தின் நோக்கம் என்று படக்குழு பெருமை பேசிக் கொண்டிருக்கிறது. நல்லது.


அந்த போலீஸ் வன்னியரா? ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் -  வன்னியர் சங்கத் தலைவர்

மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவதற்கானது என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒரு திரைப்படம், உண்மைகளை மறைத்து பொய்களைக் கட்டமைக்க முயன்றிருப்பதும், தங்களின் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சிக் கொள்வதற்காக, நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட முயன்றிருப்பதும், ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தியிருப்பதும் அருவருக்கத் தக்கவை ஆகும். திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்திற்கும், திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் குறியீடுகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. அவை திரைப்படக் குழுவினரின் முகத்திரையைக் கிழித்து அகத்திரையையும், அதில் படிந்து கிடக்கும் அழுக்கு - சகதிகளையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக

கொலை செய்திருக்கிறது என்ற உண்மையைக் காட்டுவதை விட, அந்த படுகொலையை அரங்கேற்றிய காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலை நிறுத்துவதற்காகத் தான் படக்குழு பாடுபட்டிருக்கிறது. அழுக்கு மனதுடனும், வடிகட்டிய வன்மத்துடனும் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞளை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொடுமைப்படுத்தி படுகொலை செய்யும் காவல்துறை உதவி ஆய்வாளரை வன்னியர் என்று காட்டும் நோக்கத்துடன் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் நாட்காட்டி இருப்பது போன்று காட்சிப்படுத்தியுள்ளனர். 

சம்பந்தப்பட்ட ஊரின் ஊராட்சித் தலைவரை சாதிவெறி பிடித்தவரைப் போன்று காட்டியிருக்கின்றனர். கொடூரமான காவல்துறை அதிகாரியின் வீட்டில் வன்னியர் சங்க நாட்காட்டி இருந்தது அறியாமல் செய்த தவறு என்று ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இயக்குனரின் நாடகத்தை நம்புவதற்கு வன்னியர்கள் ஏமாளிகள் அல்ல. காவல் அதிகாரியின் வீட்டில் தொங்குவது ஏதோ ஒரு நாட்காட்டி அல்ல. அப்பாவி இளைஞர் கொலை செய்யப்பட்ட தேதியைக் காட்டும் வகையில், படப்பிடிப்புக்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நாட்காட்டி ஆகும். அதில் எதிர்பாராமல் தவறு நடந்து விட்டதாக ஒருவர் கூறினால், அது வடிகட்டிய பொய் என்பதைத் தவிர வேறில்லை. உடல் முழுவதும் வன்மம் பரவியது மட்டுமின்றி, வன்னிய சாதி வெறுப்பு தலைக்கேறிய பிறவிகளுக்குத் தான் யாரோ செய்த கொடுமையை வன்னியர்கள் மீது சுமத்தும் மனநிலை இருக்கும்.

வன்னியர்களின் அடையாளமான அக்னிக் கலசம் இடம் பெற்ற வன்னியர் சங்க நாட்காட்டி திட்டமிட்டே வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இன்னொரு காட்சியையும் ஆதாரமாக சுட்டிக்காட்ட முடியும். காவல் அதிகாரி ஒருவரும், வழக்கறிஞரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, சம்பந்தப்பட்ட கொடூரக் காவல் அதிகாரி உள்ளூரில் சாதி பின்புலம் கொண்டவர் என்று கூறுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஒடுக்கப்பட்ட சமுதாயம் அனுபவித்த கொடுமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக படம் எடுப்பதாகக் கூறிக் கொள்பவர்கள், தேவையின்றி ஒரு சாதியை, குறிப்பாக வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்த முயன்றிருப்பதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும்; இது குரூர சிந்தனையின் வெளிப்பாடு.


அந்த போலீஸ் வன்னியரா? ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் -  வன்னியர் சங்கத் தலைவர்

கலை என்பது அழகு. கலைஞர்கள் அடுத்தவர்களின் மளங்களை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். அதிலும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த தனி மனிதர் செய்த குற்றத்திற்காக, அதில் எந்த சம்பந்தமுமற்ற இன்னொரு சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது கலையும் அல்ல... அழகும் அல்ல... மாறாக மிருகங்களை விட கீழான மனநிலையின் கோர வெளிப்பாடு தான். அம்பேத்கரின் அழகியக் குறியீட்டைத் தலைப்பாக வைத்து படம் எடுத்துள்ள ஜெய்பீம் குழுவினர் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்குவதுடன், வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்துக் காட்சிகளிலும் காவல் அதிகாரியின் பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget