மேலும் அறிய

Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

‛என்னுடைய உடல் எடை குறித்து என்னைவிட அதிகம் கவலையடையும் நபர்களே, நீங்கள்  உடல் எடையை குறைக்கவும், அழகாக இருக்கவும் இங்கிருக்கவில்லை,’ என ,தன் மீதான உருவ கேலி குறித்து இளம் நடிகை சனுஷ்கா பதிலளித்துள்ளார்.

2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் காசி. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சனுஷா. இவர் மலையாளத்தில் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் விக்ரம் படமாக பீமாவில் த்ரிஷாவின் தங்கையாக நடித்தார். பின்னர் ரேணிகுண்டா படத்தில் நடிகையாக கால்பதித்தார் சனுஷா. ஆனாலும் அதற்கு பின் அவருக்கு நாயகியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இளம் வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் துணை கதாபாத்திரங்களே கிடைத்தன.கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராகவும், கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாகவும் நடித்தார். 


Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

பின்னர் கொரோனாவால் சினிமாத்துறையே சத்தமில்லாமல் கிடக்கும் நிலையில் சனுஷாவும் வீட்டில் முடங்கியுள்ளார். வீட்டில் இருந்த காலக்கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக இருந்தார் சனுஷா. அவர் இன்ஸ்டாவில் பகிரும் புகைப்படங்களை பார்க்கும் சிலர் அவர் உடல் எடை குறித்தும் பேசுவது உண்டு. இந்நிலையில் மீண்டும் ஸ்லிம்மாக மாறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சனுஷா. புகைப்படத்தை மட்டுமல்ல தன்  உடல் எடை குறித்து பேசிய நபர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார்.

சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் கன்ஃபார்ம்?! எவ்வளவு சம்பளம் கேட்டாங்க தெரியுமா?

அதில் ,என்னுடைய உடல் எடை குறித்து என்னைவிட அதிகம் கவலையடையும் நபர்களே,நீங்கள்  உடல் எடையை குறைக்கவும், அழகாக இருக்கவும் இங்கிருக்கவில்லை. எப்பொழுதும் நினைவில் வையுங்கள், நீங்கள் ஒருவரை நோக்கி இருவிரலை நீட்டினால், வேறு யாராவது உங்களை நோக்கி மூன்று விரல்களை நீட்டுவார்.நீங்களும் மிக நேர்த்தியானவர்கள் இல்லை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். பாடி ஷேமிங் செய்யும் பல நபர்களுக்கு சனுஷ்காவின் பதிவு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!

முன்னதாக சனுஷா தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்திருந்தார். கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் துயரத்தை கொடுத்தது. வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் கஷ்டங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை அச்சமூட்டின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். பின்னர் என் மீது பாசம் வைத்துள்ள தம்பியை நினைத்து அந்த முடிவை கைவிட்டேன்.பின்னர் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என்றார்.

சோஷியல் மீடியாக்களில் நடிகர்களின் போட்டோவுக்கு அநாகரிகமாக கமெண்ட் செய்வதும், அதற்கு குறிப்பிட்ட நடிகர்கள் உடனடியாக நச் பதில் அளிப்பதும் அவ்வப்போது நடக்கிறது. சமீபத்தில் கூட நடிகை பார்வதி நாயரிடம் ரசிகர் ஒருவர் “ உங்கள் சைஸ் என்ன?” என கேட்க , அதனை ஸ்கிப் செய்யாமல் துணிச்சலாக பதில் அளித்த பார்வதி நாயர், ஷூ சைஸ் 37” என்றும் , ட்ரஸ் சைஸ் "S" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி குவித்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanusha Santhosh💫 (@sanusha_sanuuu)

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Embed widget