Actress Sanusha Social Media | ‛உங்களுக்கு வேற வேலை இல்லையா...’ உருவக்கேலிக்கு பதிலடி தந்த ரேனிகுண்டா நடிகை!
‛என்னுடைய உடல் எடை குறித்து என்னைவிட அதிகம் கவலையடையும் நபர்களே, நீங்கள் உடல் எடையை குறைக்கவும், அழகாக இருக்கவும் இங்கிருக்கவில்லை,’ என ,தன் மீதான உருவ கேலி குறித்து இளம் நடிகை சனுஷ்கா பதிலளித்துள்ளார்.

2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் காசி. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சனுஷா. இவர் மலையாளத்தில் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் விக்ரம் படமாக பீமாவில் த்ரிஷாவின் தங்கையாக நடித்தார். பின்னர் ரேணிகுண்டா படத்தில் நடிகையாக கால்பதித்தார் சனுஷா. ஆனாலும் அதற்கு பின் அவருக்கு நாயகியாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இளம் வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததால் துணை கதாபாத்திரங்களே கிடைத்தன.கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராகவும், கொடிவீரன் படத்தில் சசிகுமாரின் தங்கையாகவும் நடித்தார்.

பின்னர் கொரோனாவால் சினிமாத்துறையே சத்தமில்லாமல் கிடக்கும் நிலையில் சனுஷாவும் வீட்டில் முடங்கியுள்ளார். வீட்டில் இருந்த காலக்கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாக இருந்தார் சனுஷா. அவர் இன்ஸ்டாவில் பகிரும் புகைப்படங்களை பார்க்கும் சிலர் அவர் உடல் எடை குறித்தும் பேசுவது உண்டு. இந்நிலையில் மீண்டும் ஸ்லிம்மாக மாறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சனுஷா. புகைப்படத்தை மட்டுமல்ல தன் உடல் எடை குறித்து பேசிய நபர்களுக்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார்.
சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் கன்ஃபார்ம்?! எவ்வளவு சம்பளம் கேட்டாங்க தெரியுமா?
அதில் ,என்னுடைய உடல் எடை குறித்து என்னைவிட அதிகம் கவலையடையும் நபர்களே,நீங்கள் உடல் எடையை குறைக்கவும், அழகாக இருக்கவும் இங்கிருக்கவில்லை. எப்பொழுதும் நினைவில் வையுங்கள், நீங்கள் ஒருவரை நோக்கி இருவிரலை நீட்டினால், வேறு யாராவது உங்களை நோக்கி மூன்று விரல்களை நீட்டுவார்.நீங்களும் மிக நேர்த்தியானவர்கள் இல்லை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உங்களை கவனித்துக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். பாடி ஷேமிங் செய்யும் பல நபர்களுக்கு சனுஷ்காவின் பதிவு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக சனுஷா தற்கொலைக்கு முயன்றதாக அவர் தெரிவித்திருந்தார். கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் துயரத்தை கொடுத்தது. வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் கஷ்டங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை அச்சமூட்டின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். பின்னர் என் மீது பாசம் வைத்துள்ள தம்பியை நினைத்து அந்த முடிவை கைவிட்டேன்.பின்னர் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன் என்றார்.
சோஷியல் மீடியாக்களில் நடிகர்களின் போட்டோவுக்கு அநாகரிகமாக கமெண்ட் செய்வதும், அதற்கு குறிப்பிட்ட நடிகர்கள் உடனடியாக நச் பதில் அளிப்பதும் அவ்வப்போது நடக்கிறது. சமீபத்தில் கூட நடிகை பார்வதி நாயரிடம் ரசிகர் ஒருவர் “ உங்கள் சைஸ் என்ன?” என கேட்க , அதனை ஸ்கிப் செய்யாமல் துணிச்சலாக பதில் அளித்த பார்வதி நாயர், ஷூ சைஸ் 37” என்றும் , ட்ரஸ் சைஸ் "S" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி குவித்தனர்.
View this post on Instagram
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















