நாக சைதன்யா ஷோபிதா திருமண நாளுக்கு முன் சமந்தா கொடுத்த ஷாக்...இத நோட் பண்ணீங்களா
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதாவின் முதலாண்டு திருமண நாளுக்கு சில தினங்கள் முன்பு சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது

நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவை இன்று திருமணம் செய்துகொண்டார். கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா கடந்த ஆண்டு நடிகை ஷோபிதாவை திருமணம் செய்துகொண்டார். நாக சைதன்யா ஷோபிதாவின் முதலாம் ஆண்டு திருமண நாள் இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் சமந்தா தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது
சமந்தா ராஜ் நிடிமொரு திருமணம்
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை வெளிவராத புதிராகவே இருந்து வருகிறது. சமந்தாவுடன் விவாகரத்திற்கு பின் நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். மறுபக்கம் சமந்தா கடந்த சில ஆண்டுகளாக சமந்தா சிங்கிளாக வலம் வந்தார். சினிமாவில் தொடர் தோல்விகள் , மையோசிடிஸ் பாதிப்பு என தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சமந்தா தனியாக எதிர்கொண்டு வந்தார்
இப்படியான நிலையில் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. குடும்ப விழாக்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து காணப்பட்டனர். ஆனால் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இப்படியான நிலையில் இன்று சமந்தா மற்றும் ராஜ் நிடிமொரு திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் இருவருக்கும் நெருங்கிய வட்டத்தினர் மத்தியில் திருமணம் நடைபெற்றது. தனது திருமண புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
நாக சைதன்யா ஷோபிதா ஓராண்டு நிறைவு
சமந்தாவின் திடீர் திருமணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதிலும் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நாக சைதன்யா மற்றும் ஷோபிதா தங்களது ஓராண்டு திருமண வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள். இதற்கு சில நாட்கள் முன்பு சமந்தா தனது திருமண புகைப்படங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. திருமணத்திற்கு பின் சில நேர்காணல்களில் சமந்தா நாக சைதன்யாவைப் பற்றி கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.





















