Rithika Singh Viral Video: போட்டோ ஷூட்டிங்கின் போது குளத்தில் தவறி விழுந்த பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ..!
போட்டோ ஷூட்டிங் போது ஈரமான தோற்றத்தை படமாக்க நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் நான் குளத்தில் விழுந்து ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போல முழுமையாக மூழ்கினேன்.
நடிகை ரித்திகா சிங் போட்டோ ஷூட் எடுக்கும்போது தண்ணீர் தவறி இழுந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குத்துச் சண்டை வீராங்கனையாக இருந்தவர் ரித்திகா சிங். சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவான இந்தப் படத்தில் இவரே நடித்தார். இந்தப் படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, லாரன்ஸ் உடன் சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், நடிகை ரித்திகா சிங் குளம் ஒன்றின் அருகே போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோ ஷூட்டின் போது எதிர்பாராதவிதமாக ரித்திகா சிங் குளத்தில் தவறி விழுந்துள்ளார். குளத்தில் இருந்தபடியே போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான, புகைப்படம் மற்றும் வீடியோக்களை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்த போட்டோ ஷூட் தொடர்பாக ரித்திகா சிங், ‘அனிதா காமராஜ் இந்த அற்புதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படமாக்குவதற்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த போட்டோ ஷூட்டிங் போது ஈரமான தோற்றத்தை படமாக்க நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் நான் குளத்தில் விழுந்து ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போல முழுமையாக மூழ்கினேன். குளத்தில் இருந்து வெளியேறிய பிறகு என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை, நான் விழுந்த விதம் வேடிக்கையாக இருந்தது. ஆனால் எங்கள் குழு வேடிக்கையான இந்த நிகழ்வுக்கு பிறகு, சிறந்த காட்சிகளை எடுக்க முடிந்தது’ எனப் பதிவிட்டுள்ளார்.