மேலும் அறிய

Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!

என் கணவர் செந்தாமரையை படாதபாடு படுத்தினேன். ஏற்கனவே 3 குழந்தைகள் வளர்ந்திருந்ததால் என் டார்ச்சரை பொறுத்துக் கொண்டார். நாங்கள் இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம் என நடிகை கௌசல்யா தெரிவித்துள்ளார்.

3 பிள்ளைகள் இருப்பது தெரிந்து தான் என் கணவர் செந்தாமரையை திருமணம் செய்துக் கொண்டேன் என நடிகை கௌசல்யா நேர்காணல் ஒன்றில் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். 

அந்த நேர்காணலில் பேசிய அவர், “செந்தாமரை காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்தார். கருணாநிதிக்கு அவரைப் பற்றி அண்ணா ஒரு கடிதம் எழுதி அனுப்பினர். கலைஞர் எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் எழுதி சிபாரிசு செய்தார். எம்ஜிஆர் நாடக மன்றத்திற்கு வந்த நிலையில் நாங்க மும்பை சென்று விட்டு ஊர் திரும்பியிருந்தோம். அந்த நாடக மன்றத்தில் அன்றைக்கு ஒருவர் வரவில்லை என்பதால் செந்தாமரை இரண்டாவது ஹீரோவாக நடித்தார். 

அதேசமயம் நான் நடிக்க வந்தது மிகப்பெரிய பிரச்னையாகும். எங்க அம்மா, அண்ணனுக்காக படம் எடுக்க 
வந்த இடத்தில் நான் மாட்டிக் கொண்டேன். அந்த படம் ரிலீஸ் செய்யாமல் அம்மா விட்டு விட்டார். நான் திருடாதே என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தேன். நாங்கள் அண்ணன், தங்கச்சியாக தான் எம்ஜிஆர் நாடக மன்றத்தின் நாடகத்தில் முதன் முதலில் நடித்தோம். 

எங்களுடைய திருமணம் கலாட்டாவாக இருந்தது. நாடக மன்றத்தில் இருந்தபோது எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. இருந்தாலும் திருமணம் செய்துக் கொண்டோம். அதன்பிறகு இருவரும் ஒற்றுமையாக இருந்தோம். ஆர்.ஆர்.லதா என்பவர் தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தார். எங்கள் திருமணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு திருமணம் நடைபெற்றிருந்தது. 

ஆனால் அந்த மனைவி இறந்து 5 ஆண்டுகளாகி இருந்தது. ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் திருமணம் செய்திருக்க மாட்டேன். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் சேர்த்து நான்காவதாக குழந்தையாக என்னையும் வளர்த்தார். அப்போது எனக்கு புரிதலே இருக்காது. 17 வயது தான் ஆகியிருந்தது. கணவர் சொன்னதை செய்வேன். என்னை 6 மாதம் அவருக்கேற்ற மாதிரி மாற்றிக் காட்டினார். 

Also Read: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்

என் கணவர் செந்தாமரையை படாதபாடு படுத்தினேன். ஏற்கனவே 3 குழந்தைகள் வளர்ந்திருந்ததால் என் டார்ச்சரை பொறுத்துக் கொண்டார். நாங்கள் இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். என் அம்மா மாதிரி நன்றாக பார்த்துக் கொண்டதால் எனக்கு அவரை ரொம்ப பிடித்து விட்டது. என் பெயரைக் கூட சொல்ல மாட்டார். என்னை மக்கு, அம்மா என சொல்வார். காரணம் கேட்டால் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல மாட்டார். மரியாதைக்குறைவாக பேச மாட்டார். 

படத்தில் வில்லத்தனம் செய்வாரே தவிர, நிஜத்தில் ரொம்ப சாந்தமானவர். அவருடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். கஷ்டம் என யாராவது வந்தால் என்னிடம் இவ்வளவு தான் இருக்கிறது என இருப்பதை வெளிப்படையாக சொல்லி கொடுப்பார்” என நடிகை கௌசல்யா கூறியுள்ளார்.   

Advertisement

தலைப்பு செய்திகள்

Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
தனுஷ் அரசியல் கட்சி தொடங்குகிறாரா? நற்பணி மன்ற செயலாளர் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
ரொம்ப கம்மி வட்டியில் மானிய கடன்.! நேரில் வாங்க.. அள்ளிட்டு போங்க- தேதி குறித்த ஆட்சியர்
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Embed widget