வீட்டில் ஒரே கொண்டாட்டம்..கருப்பு வெற்றி குறித்து ஜோதிகா
கருப்பு திரைப்படத்தின் வெற்றிக் குறித்து சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்

சூர்யாவின் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியான கருப்பு திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள். கருப்பு படத்தின் வெற்றியால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். அதே சூர்யா வீட்டில் கருப்பு படத்தின் வெற்றியை கொண்டாடி வருவதாக நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி வெளியானது. கடந்த 12 ஆண்டுகளாக சூர்யா ரசிகர்களுக்கு திரையரங்கில் கொண்டாடும் விதமான மாஸ் கமர்சியல் படம் அமையவில்லை. இதனால் கருப்பு படத்தை ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரிலீஸுக்கு முன்பே பல பிரச்சனைகளை எதிர்கொண்ட கருப்பு ரிலீஸ் அன்றும் தயாரிப்பாளர் கடன் பிரச்சனையால் ரிலீஸ் தடைபட்டது. ஒரு நாள் தாமதமாக மே 15 ஆம் தேதி திரையரங்கில் கருப்பு வெளியானது.
ஓயாத ரசிகர்கள் கொண்டாட்டம்
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கருப்பு திரைப்படம் ரசிகர்கள் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. கருப்புசாமியாக நடித்துள்ள சூர்யா படத்தில் உள்ள மற்ற குறைகளை மறக்க செய்யும் அளவிற்கு இப்படத்தில் தோற்றத்திலும் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் சாய் அப்யங்கரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கருப்பா கூட வா , காட் மோட் ஆகிய பாடல்களுக்காகவே ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் பார்க்க கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள். கோடை விடுமுறையான மே மாதத்தில் வேறு எந்த பெரிய நடிகரின் படம் வெளியாகாததும் கருப்பு படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
வசூல்
கருப்பு திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ 160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 100 கோடி வசூலிக்கும் என்று உலகளவில் இப்படம் ரூ 300 கோடி வரை வசூல் செய்யும் என்றும் சினிமா வர்த்தக தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான கர , பராசக்தி ஆகிய படங்களை கடந்து கருப்பு திரைப்படம் வசூலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. அதே போல் சூர்யாவின் கரியரிலும் அதிக வசூல் ஈட்டிய படமாக கருப்பு படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருப்பு பற்றி ஜோதிகா
கருப்பு படம் பற்றி நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதில் அவர் " கடைசி 10 நிமிடம் சூர்யா மிக அற்புதமாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கிடைத்துள்ள அன்பிற்காக நாங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். வீட்டிலும் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்" என கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















