மேலும் அறிய

VJ Chitra: நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் விடுதலை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தமிழில் பிரபல நடிகையாக திகழ்ந்த சித்ராவின் மரண வழக்கில், அவரது காதல் கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் திரைப்படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபலமான சின்னத்திரை நடிகையாக உலா வந்தவர் சித்ரா. இவர் கடந்த 2020ம் ஆண்டு மர்மமான முறையில் ஓட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சித்ரா கணவர் விடுதலை:

அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். சித்ராவின் மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.

இந்த சூழலில், அவரது மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார்.

தற்கொலையா? கொலையா?

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக மிக பிரபலமான தொடர் ஆகும். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் சித்ரா. இவர் நடித்த முல்லை என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிக மிக வரவேற்பை பெற்றது ஆகும். இந்த சூழலில், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

2013ம் ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் தமிழின் பிரபல தொலைக்காட்சிகளான ஜெயா டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியவர். இவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படப்பிடிப்பிற்காக ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவுடன் அவரது காதல் கணவர் ஹேமந்த்குமாரும் தங்கியிருந்தார். ஹேமந்த்குமார் வௌியே சென்றிருந்த நேரத்தில் உள்ளிருந்து கதவு தாழிட்டிருந்ததால், கதவை திறக்குமாறு சித்ராவை அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் எந்த பதிலும் வராததால் விடுதி ஊழியர் உதவியுடன் மாற்று சாவியை பயன்படுத்தி திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதை வழக்காக போலீசார் பதிவு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இருவரும் ஏற்கனவே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. ஹேம்நாத் மீது சித்ரா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அவரை காவல்துறை கைது செய்தது. பின்னர், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget