மேலும் அறிய

Actor Soori: 'கனவுல கூட போலீஸ் ஸ்டேஷன்தான் வருது...' : நிலமோசடி புகாரில் நடிகர் சூரி 4-வது முறையாக ஆஜர்

நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது.

நிலமோசடி தொடர்பான புகாரில் நடிகர் சூரி 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 

வழக்கு விபரம்

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சூரியும், நடிகர் விஷ்ணு விஷாலும் தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர்.  இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் இடம் வாங்க சூரி திட்டமிட்ட நிலையில் இதுகுறித்து விஷ்ணு விஷாலிடம் கூறியிருக்கிறார். உடனே விஷ்ணு விஷால் தன்னுடைய தந்தையும்,  ஓய்வுபெற்ற டி.ஜி.பியான ரமேஷிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனை நடிகர் சூரிக்கு ரமேஷ் அறிமுகப்படுத்தியதாகக் சொல்லப்படுகிறது. இருவரும் நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. பின்னர் வாங்கிய இடத்துக்கு பாதை இல்லை என்ற விவரம் நடிகர் சூரிக்கு தெரியவர அவர் இதுகுறித்து விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் என மூவரிடமும் முறையிட்டுள்ளார். 

இதனையடுத்து இவர்கள் அந்த இடத்தை தாங்களே வாங்கிகொள்வதாக தெரிவித்து 10 லட்சம் முன் பணமாக வழங்கியுள்ளனர்.  மீதமுள்ள பணத்தை ஆண்டுக்கணக்கில் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பணியிலிருந்து ரமேஷ் ஓய்வு பெற்ற நிலையில், அப்போது சூரி  பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பணம் கொடுக்கப்படாததால் காவல்துறை உயரதிகாரிகளிடம் சூரி புகாரளித்தார். 

கோர்ட்டுக்கு சென்ற சூரி

பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது அடையாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில்  நிலத்தின் மதிப்பு கோடியை தாண்டியதால் இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்டதோடு, 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்ட நிலையில் ஏற்கனவே 3 முறை நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் இன்று 4வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, பேசுவதற்கு ஒன்றுமில்லை. நில மோசடி வழக்கு விசாரணை போய்க்கிட்டே இருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்தாலே குழந்தைகள் போலீஸ் ஸ்டேஷன் போறீங்களான்னு கேக்குறாங்க. நியாயம் கிடைக்கும். காவல்துறையினர், நீதிமன்றத்தை நம்பியிருக்கிறேன் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
Actor Suhas: யூட்யூப் சேனல் டூ சினிமா.. மண்டாடியில் வில்லனாக அசத்திய சுஹாஸ்.. யார் தெரியுமா?
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
CM Vijay - AjithKumar: விஜயுடன் இணைந்த அஜித்.. இதெல்லாம் பச்ச துரோகம்.. சோசியல் மீடியாவில் கொந்தளித்த ரசிகர்கள்!
Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
Director Nagaraj: குடியால் சீரழிந்த வாழ்க்கை.. 13 ஆண்டுகளுக்குப் பின் படம் இயக்கிய தினந்தோறும் நாகராஜ்!
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்
Soori: மாஸ் காட்டும் மண்டாடி.. நாளுக்கு நாள் எகிறும் வசூல்! சூரியை கொண்டாடும் ரசிகர்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget