மேலும் அறிய

Actor Soori: 'கனவுல கூட போலீஸ் ஸ்டேஷன்தான் வருது...' : நிலமோசடி புகாரில் நடிகர் சூரி 4-வது முறையாக ஆஜர்

நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது.

நிலமோசடி தொடர்பான புகாரில் நடிகர் சூரி 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 

வழக்கு விபரம்

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சூரியும், நடிகர் விஷ்ணு விஷாலும் தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர்.  இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் இடம் வாங்க சூரி திட்டமிட்ட நிலையில் இதுகுறித்து விஷ்ணு விஷாலிடம் கூறியிருக்கிறார். உடனே விஷ்ணு விஷால் தன்னுடைய தந்தையும்,  ஓய்வுபெற்ற டி.ஜி.பியான ரமேஷிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனை நடிகர் சூரிக்கு ரமேஷ் அறிமுகப்படுத்தியதாகக் சொல்லப்படுகிறது. இருவரும் நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. பின்னர் வாங்கிய இடத்துக்கு பாதை இல்லை என்ற விவரம் நடிகர் சூரிக்கு தெரியவர அவர் இதுகுறித்து விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் என மூவரிடமும் முறையிட்டுள்ளார். 

இதனையடுத்து இவர்கள் அந்த இடத்தை தாங்களே வாங்கிகொள்வதாக தெரிவித்து 10 லட்சம் முன் பணமாக வழங்கியுள்ளனர்.  மீதமுள்ள பணத்தை ஆண்டுக்கணக்கில் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பணியிலிருந்து ரமேஷ் ஓய்வு பெற்ற நிலையில், அப்போது சூரி  பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பணம் கொடுக்கப்படாததால் காவல்துறை உயரதிகாரிகளிடம் சூரி புகாரளித்தார். 

கோர்ட்டுக்கு சென்ற சூரி

பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது அடையாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில்  நிலத்தின் மதிப்பு கோடியை தாண்டியதால் இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்டதோடு, 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்ட நிலையில் ஏற்கனவே 3 முறை நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் இன்று 4வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, பேசுவதற்கு ஒன்றுமில்லை. நில மோசடி வழக்கு விசாரணை போய்க்கிட்டே இருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்தாலே குழந்தைகள் போலீஸ் ஸ்டேஷன் போறீங்களான்னு கேக்குறாங்க. நியாயம் கிடைக்கும். காவல்துறையினர், நீதிமன்றத்தை நம்பியிருக்கிறேன் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
மேரேஜ் ஸ்டோரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
அசினின் இடத்தை நிரப்ப வருகிறாரா மமிதா பைஜூ? ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஒற்றுமை இருக்கே!
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் நடிக்கும் பட பூஜை...சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்
மேடையில் நடிக்க வாய்ப்பு கேட்ட சமந்தா...இவருக்கே இந்த நிலமையா என ரசிகர்கள் ஷாக்

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekedatu Dam Resolution : சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
சிஎம் விஜய் போட்ட செம பிளான்.! கர்நாடக காங். அரசுக்கு செக்- நாளை சட்டமன்றத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget