மேலும் அறிய

Actor Soori: 'கனவுல கூட போலீஸ் ஸ்டேஷன்தான் வருது...' : நிலமோசடி புகாரில் நடிகர் சூரி 4-வது முறையாக ஆஜர்

நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது.

நிலமோசடி தொடர்பான புகாரில் நடிகர் சூரி 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். 

வழக்கு விபரம்

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சூரியும், நடிகர் விஷ்ணு விஷாலும் தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம், கதாநாயகன், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர்.  இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் இடம் வாங்க சூரி திட்டமிட்ட நிலையில் இதுகுறித்து விஷ்ணு விஷாலிடம் கூறியிருக்கிறார். உடனே விஷ்ணு விஷால் தன்னுடைய தந்தையும்,  ஓய்வுபெற்ற டி.ஜி.பியான ரமேஷிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனை நடிகர் சூரிக்கு ரமேஷ் அறிமுகப்படுத்தியதாகக் சொல்லப்படுகிறது. இருவரும் நடிகர் சூரியிடம் சிறுசேரியில் உள்ள ஒரு ஏக்கர் 82 சென்ட் இடத்தை காட்டி அதனை ரூ.5.75 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததோடு சிறுசேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. பின்னர் வாங்கிய இடத்துக்கு பாதை இல்லை என்ற விவரம் நடிகர் சூரிக்கு தெரியவர அவர் இதுகுறித்து விஷ்ணு விஷால், அவரது தந்தை ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் என மூவரிடமும் முறையிட்டுள்ளார். 

இதனையடுத்து இவர்கள் அந்த இடத்தை தாங்களே வாங்கிகொள்வதாக தெரிவித்து 10 லட்சம் முன் பணமாக வழங்கியுள்ளனர்.  மீதமுள்ள பணத்தை ஆண்டுக்கணக்கில் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு பணியிலிருந்து ரமேஷ் ஓய்வு பெற்ற நிலையில், அப்போது சூரி  பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பணம் கொடுக்கப்படாததால் காவல்துறை உயரதிகாரிகளிடம் சூரி புகாரளித்தார். 

கோர்ட்டுக்கு சென்ற சூரி

பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது அடையாறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில்  நிலத்தின் மதிப்பு கோடியை தாண்டியதால் இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்டதோடு, 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இவ்வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றிப்பட்ட நிலையில் ஏற்கனவே 3 முறை நடிகர் சூரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் இன்று 4வது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூரி, பேசுவதற்கு ஒன்றுமில்லை. நில மோசடி வழக்கு விசாரணை போய்க்கிட்டே இருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்தாலே குழந்தைகள் போலீஸ் ஸ்டேஷன் போறீங்களான்னு கேக்குறாங்க. நியாயம் கிடைக்கும். காவல்துறையினர், நீதிமன்றத்தை நம்பியிருக்கிறேன் என தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget