மேலும் அறிய

விரைவில் அப்டேட்- திருச்செந்தூர் முருகன் கோயிலில் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

திரை உலகின் முன்னணி இயக்குனராக இருக்கக்கூடிய ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர்கள் ரசிகர்களிடையேயும் பத்திரிகையாளர்களிடமும் குண்டர்கள் போல நடந்துகொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க செய்தது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார். ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 



விரைவில் அப்டேட்- திருச்செந்தூர் முருகன் கோயிலில் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

                                                         நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்

தமிழ்த்திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று ஆனி வருசாபிஷேகத்தை முன்னிட்டு திடீரென கோயிலுக்கு வந்த அவர் மூலவர்,  சண்முகர், குரு தட்சிணாமூர்த்தி மற்றும் வள்ளி, தெய்வானை  உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலிலிருந்து வெளியே வந்த அவரை சண்முகவிலாஸ் மண்டபத்தில் வைத்து  கோயில் பணியாளர்களும் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரும்  சூழ்ந்து கொண்டு போட்டிபோட்டு  புகைப்படம் எடுத்தனர்.


விரைவில் அப்டேட்- திருச்செந்தூர் முருகன் கோயிலில் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

அதனைத்தொடர்ந்து  பிரகாரத்தை விட்டு வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயன் கோயில் பேட்டரி வாகனத்தில் சென்று வள்ளி குகை மேல் நின்று கோபுர தரிசனம் செய்தார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு கைகளை குலுக்கியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். தன்னை தேடி வந்த அனைத்து ரசிகர்களுக்கும் சிரித்த முகத்துடன் கைகளை குலுக்கி புகைப்படம் எடுத்து அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்.  தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றுவருவதாகவும்,  படப்படிப்பு அருமையாக சென்றுகொண்டிருப்பதாகவும் விரைவில் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் வரும் என தெரிவித்தார்.

                                                                       நடிகை ரோஜா சுவாமி தரிசனம்


விரைவில் அப்டேட்- திருச்செந்தூர் முருகன் கோயிலில் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரைப்பிரபலங்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் நடிகை ரோஜா, அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி சுவாமி தரிசனம் செய்தனர். ரசிகர்கள் செல்ஃபி எடுக்க சூழ்ந்து கொண்டனர்.

ஆனி உத்திர வருஷாபிஷேகத்தையொட்டி கோயிலுக்கு வந்த நடிகையும் ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர்,  சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்கள். தொடர்ந்து கோவிலிலிருந்து வெளியே வந்த அவரை  சண்முகவிலாஸ் மண்டபத்தில் வைத்து  கோவில் பணியாளர்களும், பக்தர்களும் சூழ்ந்து கொண்டு போட்டிபோட்டு செல்ஃபி எடுத்தனர். நடிகை ரோஜாவும் பக்தர்களுடன் சிரித்த முகத்தோடு புகைப்படம் எடுத்து கொண்டார்.


விரைவில் அப்டேட்- திருச்செந்தூர் முருகன் கோயிலில் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார்   10-க்கும் மேற்பட்டோல் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது  அவர்களை செய்தியாளர்கள்   வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.  அப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்கள்  செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை தடுத்தனர்.


விரைவில் அப்டேட்- திருச்செந்தூர் முருகன் கோயிலில் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

மேலும் அங்கிருந்த ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் செல்போனை பறித்துக்கொண்டனர். மேலும் தொடர்ந்து செய்தியாளர்களின்  கேமரா மற்றும் செல்போனை தட்டிவிட்டு அவரது உதவியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனை இயக்குனர் முருகதாஸ் கண்டும் காணததுபோல சென்றார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை பார்த்ததும் புகைப்படம் எடுக்கச்சென்ற ரசிகர்களையும் புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்து வெளியேற்றியதால் ரசிகர்களும் ஏமாற்றத்திற்குள்ளாகினர். திரை உலகின் முன்னணி இயக்குனராக இருக்கக்கூடிய ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர்கள் ரசிகர்களிடையேயும் பத்திரிகையாளர்களிடமும் குண்டர்கள் போல நடந்துகொண்ட சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க செய்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget