எனக்கு பிளாக் மேஜிக் பண்றாங்க..ரத்த வாந்தி வருது..கதறி அழும் ரவி மோகன்
தனது கட்டுப்பாடிற்குள் வைத்துக்கொள்ள தனது மனைவி ஆர்த்தி தனக்கு செய்வினை வைத்துள்ளதாக நடிகர் ரவி மோகன் பேட்டியில் தெரிவித்துள்ளார்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த பிறகு பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ரவி மோகன் நெருங்கி பழகிவந்த கெனிஷா பிரான்சிஸ் மீது சமூக வலைதளங்களில் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் தங்களது நட்பை முடித்துக்கொண்டுள்ளார்கள். இது குறித்து ரவி மோகன் இன்று தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். அப்போது தன்னை கட்டுப்படுத்த ஆர்த்தி தனக்கு ப்ளாக் மேஜிக் வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்
நான் சாகவேண்டும் என்று விரும்புகிறார்கள்
ரவி மோகன் பேசுகையில் " நான் இத்தனை ஆண்டுகள் சம்பாதித்த அனைத்தையும் அவர்களிடம் கொடுத்துவிட்டேன். என் பெயரில் சொந்தமாக ஒரு வங்கி கணக்கு கூட இல்லை. என் பெயரில் ஒரே ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட் மட்டும்தான் இருந்தது. அதில் நான் எந்த செலவு செய்தாலும் உடனே எனக்கு போன் செய்து என்ன செலவு என்று கணக்கு கேட்பார்கள். என் பணத்தை தானே நான் செலவு செய்தேன். அவர்கள் நான் சாகவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாரையும் முடித்துவிட்டு தான் நான் சந்தோஷமாக சாவேன். ஏற்கனவே நான் என்னை நானே வறுத்திக்கொள்ள தொடங்கிவிட்டேன். என்னை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக இத்தனை ஆண்டுகள் பிளாக் மேஜிக் செய்து வந்தார்கள். இப்போதும் அதை செய்து வருகிறார்கள். இதனால் நான் ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். வேலைக்கு போய்விட்டு வீட்டிற்கு வந்தால் ஒரு மரியாதை மட்டும்தான் எதிர்பார்க்கிறேன். அதுகூட எனக்கு அந்த வீட்டில் இல்லை.
ஒருத்தருடைய வாழ்க்கையில் விளையாடக் கூடாது. ஒருத்தருடைய இமேஜுடன் விளையாடக் கூடாது .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















