S.J. Surya : எஸ்.ஜே.சூர்யா பெயருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா? .. நடந்ததை விளக்கும் இயக்குநர் மாரிமுத்து..!
வறுமையான நிலையிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையோடும் கனவோடும் திரைப்பயணத்தை தொடங்கியவர் எஸ்.ஜே. சூர்யா. அதன் முதற்படியாக இயக்குநர் வசந்த்திடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றியுள்ளார். அப்படி வசந்த் இயக்கிய 'ஆசை' படத்தின் போது அவரின் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் எதிர்நீச்சல் தொடர் புகழ் மாரிமுத்து. அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவின் சீனியர் மாரிமுத்து. இன்றும் அந்த நட்பு மிக சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

நாய்குட்டியுடன் பயணம் :
ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள 'பொம்மை' திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் எஸ்.ஜே. சூர்யா பற்றி பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார் நடிகர் மாரிமுத்து. 'ஆசை' படத்தில் ஒரு காட்சியில் அஜித், சுவலக்ஷ்மிக்கு ஒரு நாய்க்குட்டியை பிறந்தநாள் பரிசாக கொடுப்பார். அதற்காக நாய்க்குட்டி ஒன்றை சென்னையில் இருந்து டெல்லிக்கு கொண்டு செல்லும் பொறுப்பு எஸ்.ஜே. சூர்யாவிடம் கொடுக்கப்பட்டது. அவரிடம் பணமும் நாய்குட்டியும் மட்டுமே கொடுக்கப்பட்டது.
ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. டெல்லி வரை நாய்க்குட்டியை எப்படி ஒரு ட்ரெயினில் 48 மணிநேரம் பயணம் செய்து கொண்டு சேர்ப்பது என்பது பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை சூர்யா. உடனே ஒரு பக்கெட், பால் பாக்கெட் எல்லாம் வாங்கிக்கொண்டு டெல்லி செல்லும் ஏதோ ஒரு ட்ரெயினில் ஏறி பத்திரமாக நாய்க்குட்டியை டெல்லி கொண்டு சென்று அங்கு இருந்து அரக்க பறக்க ஓடி ஷூட்டிங் ஸ்பாட்டில் நாய்க்குட்டியை ஒப்படைத்து விட்டார். அது தான் எஸ்.ஜே. சூர்யாவின் டெடிகேஷன்.

அஜித்துடன் வாலி படம் :
எஸ்.ஜே. சூர்யாவின் கடுமையான உழைப்பை ஆசை மற்றும் உல்லாசம் படத்தின் போது பார்த்த நடிகர் அஜித், அவரை அழைத்து நீங்கள் ஒரு படம் பண்ணுங்கள் நான் உங்கள் படத்தில் நடித்து கொடுக்கிறேன் என அஜித் சார் கூறினார். அப்படி அஜித் சாருக்காக உருவானது தான் 'வாலி' திரைப்படம். இப்படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா ஒரு பைசா கூட வாங்காமல் இயக்கி கொடுத்தார். அன்று அஜித் சார் இவர் மேல் வைத்திருந்த பாசம் இன்றும் துளியும் குறையவில்லை என்றார் மாரிமுத்து. தனது வறுமையான நிலையிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா.
எஸ்.ஜே. சூர்யா பெயர் காரணம் :
இயக்குநர் வசந்த் யாராக இருந்தாலும் முதலில் அவர்களின் பெயரை தான் மாற்றுவாராம். அப்படி ஜஸ்டின் செல்வராஜ் என்ற பெயரை அவர் தான் எஸ்.ஜே. சூர்யா என மாற்றினாராம். அதற்கு ஒரு பெயர் காரணமும் இருந்துள்ளது. எஸ், ஜே, ஸ்யூர், யா எல்லாமே பாசிட்டிவான விஷயங்கள் அதில் இருக்கிறது என விளக்கம் கொடுத்தாராம் இயக்குநர் வசந்த்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















