மேலும் அறிய

Kamal Haasan: "உலகநாயகன், ஆண்டவர் பட்டம் வேண்டாம்" அஜித் வழியில் கமல் - ரசிகர்கள் ஷாக்

நடிகர் கமல்ஹாசன் தன்னை இனிமேல் ரசிகர்கள் உலக நாயகன் என்றோ, ஆண்டவர் என்றோ பட்டங்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத மாபெரும் கலைஞராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், நடனக் கலைஞர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் கமல்ஹாசன்.

உலகநாயகன், ஆண்டவர் பட்டத்தை துறந்த கமல்:

இவரை ரசிகர்கள் ஆண்டவர், உலக நாயகன் என பல்வேறு பட்டங்களுடன் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், கமல்ஹாசன் இனி தன்னை ரசிகர்கள் உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று இன்று கேட்டுக்கொண்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், என் மீது அன்பு கொண்ட அன்பினால் உலக நாயகன் உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வு உண்டு.

கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை:

சினிமா கலை, எந்த ஒரு தனிமனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன்தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது; அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது.

கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்கவில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான், நிறைய யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு நேர்ந்தது.

கமல், KH என்று கூப்பிடுங்கள்:

மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்தத மரியாதை குறைவும் வந்துவிடாத வகையில் அவற்றை துறப்பதே என்பதே அது. எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

இனி வருங்காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் மக்கள் நீதிமயய கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH  என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்தில் இருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாக நான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
ADMK EPS: “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
ADMK EPS: “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
“கடைக்கு வாடகை கேட்கிறீயா?” போட்றா வீட்ல குண்ட.. கறிக்கடைக்காரரின் அதிர்ச்சி செயல்
“கடைக்கு வாடகை கேட்கிறீயா?” போட்றா வீட்ல குண்ட.. கறிக்கடைக்காரரின் அதிர்ச்சி செயல்
Karthigai Deepam: புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதிய ரேவதி.. கடைசியிலே இப்படி போச்சே - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதிய ரேவதி.. கடைசியிலே இப்படி போச்சே - கார்த்திகை தீபத்தில் இன்று
PM Modi Foreign Visit: 5 நாடுகளுக்கே ரூ.67 கோடி, அப்ப மொத்தமா? 4 ஆண்டுகளில் மோடி பறந்ததற்கான செலவு விவரம்
PM Modi Foreign Visit: 5 நாடுகளுக்கே ரூ.67 கோடி, அப்ப மொத்தமா? 4 ஆண்டுகளில் மோடி பறந்ததற்கான செலவு விவரம்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
Embed widget