மேலும் அறிய

Sabarimala: நீயெல்லாம் ஏன்டா சபரிமலை போற.. பயில்வான் ரங்கநாதனை திட்டிய நம்பியார்!

ஒரு நாள் காலையில் குளித்து முடித்து விபூதி, குங்குமம், சந்தனம் எல்லாம் வைத்துக் கொண்டு நம்பியார் சாமியை சந்தித்து நான் ஐயப்பன் மலைக்கு போறேன் சார் என சொன்னேன்.

நடிகரும், ஊடகவியலாளருமான பயில்வான் ரங்கநாதன், தான் சபரிமலைக்கு செல்லப் போகிறேன் என சொன்னபோது மறைந்த நடிகர் நம்பியார் தன்னை திட்டிய தருணத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துக் கொண்டார். 

ஒரு நேர்காணலில் பேசிய பயில்வான் ரங்கநாதன், “ஒரு நாள் காலையில் குளித்து முடித்து விபூதி, குங்குமம், சந்தனம் எல்லாம் வைத்துக் கொண்டு நம்பியார் சாமியை சந்தித்து நான் ஐயப்பன் மலைக்கு போறேன் சார் என சொன்னேன். அவர் முன்னால் போய் நின்றதும் என்னைப் பார்த்து, ‘யோவ் என்னப்பா இது கோலம்?’ என கேட்டார். நான் ஐயப்பன் மலைக்கு போறேன் என கூறினேன். உடனே டென்ஷனான நம்பியார், ‘உன்னை யாரு ஐயப்பன் மலைக்கு போக சொன்னது? .. நீங்களாம் போறதால தான் ஐயப்பன் சபரிமலையை விட்டே ஓடி போறான்’ என கூறினார். அவர் இதை சிரித்துக் கொண்டே தான் சொன்னார். 

அப்படி நம்பியார் சொல்ல காரணம், ‘சினிமாக்காரர்களால் பொதுவாக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டால் விரதம் இருக்க முடியாது. ஏனென்றால் காலை 9 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள். மாலை 6 மணிக்கு மேல் ஷூட்டிங் செல்லும். மாலையில் குளித்து விட்டு கோயிலுக்கு போயிட்டு தான் சாப்பிடணும் என விரத நடைமுறைகள் உள்ளது. அதேபோல் ஷூட்டிங்கில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் இருக்கும் என்பதால் தான் நம்பியார் சாமி அப்படி சொன்னார். 

ஆனால் நான் அப்படி கிடையாது. எனக்கு முதன்முதலில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிவித்தவர் வெங்கட்ராம ஐயர் என்பவர் தான். அவர் அசைவம் சாப்பிட மாட்டார். அவர் தான் என்னிடம் நாம் ஐயப்பன் மலைக்கு மாலை போடலாம் என கூறினார். அப்போது என்னிடம் 3 நாட்கள் மட்டுமே விரதம் இருக்க சொன்னார். நான் எப்படி அது சாத்தியம், 48 நாட்கள் இருக்க வேண்டும் என சொல்வார்களே என தெரிவிக்க, யார் சொன்னா உன்னிடம் 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என திரும்ப கேட்டார். ஐயப்பனை மனதில் நினைத்துக்கொள், அதுதான் எல்லாத்துக்கும் காரணம் என சொன்னார். அப்படியாக 3 நாட்கள் விரதமிருந்து தான் நான் முதன் முதலில் ஐயப்பன் கோயிலுக்கு சென்றேன். 

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான நம்பியார், ஐயப்ப பக்தர்களிடையே குருசாமி என அழைக்கப்படுகிறார். அவர் ஐயப்பனுக்காகவே வாழ்ந்த மகான் என அழைக்கப்படுகிறார். 1942ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சபரிமலைக்கு சென்ற அவருடன், பக்தி பாடகர் வீரமணி ராஜூ போன்றோரும் பயணித்துள்ளனர். அவருடன் சேர்ந்து இந்திய சினிமாவைச் சேர்ந்த பலரும் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget