மேலும் அறிய

42 years of Thanneer Thanneer: பூமியின் தீராத தாகம்... சமுதாய அவலத்தை தோலுரித்த 'தண்ணீர் தண்ணீர்' வெளியான நாள் இன்று..!  

42 years of Thanneer Thanneer : தண்ணீர் பஞ்சத்தால் ஊர் மக்கள் படும் அவல நிலையை துணிச்சலாக தோலுரித்த கே.பாலச்சந்தரின் 'தண்ணீர் தண்ணீர்' திரைப்படம் வெளியான நாள் இன்று.

காலங்காலமாக தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக பெரிய பிரச்சினை என்றால் அது தண்ணீர் பிரச்சினை தான். இப்படி பட்ட ஒரு சமூக அவலத்தை  கையில் எடுத்து அதை சினிமாவாக்கியது மட்டுமல்லாமல் பரிதாப மக்களின் அவல நிலை, அலட்சியம் செய்யும் அரசாங்க அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அரசியல்வாதிகள் என அனைவரின் சுயத்தையும் துணிச்சலாக இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் தோலுரித்து காட்டிய திரைப்படம் தான் 1981ம் ஆண்டு வெளிவந்த "தண்ணீர் தண்ணீர்" திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளை கடந்தாலும்  இப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த ஒரு படைத்தலும் கொடுக்க முடியாது. 

 

42 years of Thanneer Thanneer: பூமியின் தீராத தாகம்... சமுதாய அவலத்தை தோலுரித்த 'தண்ணீர் தண்ணீர்' வெளியான நாள் இன்று..!  
தண்ணீர் பஞ்சத்தை வைத்து தமிழ் சினிமாவை முதன்முதலில் கலக்கிய  படம் தான் 'தண்ணீர் தண்ணீர்' திரைப்படம். கோமல் சுவாமிநாதனின் கதை வசனத்தில் உருவான இந்த நாடகம் மாபெரும் வெற்றி பெற்று மக்களின் வரவேற்பை பெற்றது. அந்த நாடகத்தை சிறுது மேம்படுத்தி அதன் உரிமையை கைப்பற்றி கே. பாலசந்தர் இப்படத்தை இயக்கினார். 

கோவில்பட்டி அருகே உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நடைபெறும் கதைக்களமாக அமைந்த இப்படத்தில் ராதாரவி, சரிதா, வாத்தியார் ராமன், குகன், சார்லி, சண்முகம் மற்றும் பலர் நடித்திருந்தனர். பல ஆண்டுகாலமாக மழையே பெய்யாத அந்த கிராமத்தில் ஏரி, குளம், ஆறு, கிணறு என அனைத்து இடங்களும் வறட்சியில்  பிளந்து கிடைக்க அங்கே இருக்கும் மக்கள் தாகத்தால் தவிக்கும் காட்சி பார்வையாளர்களை மிரள செய்தது. அது மட்டுமின்றி மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்தில் அவதிப்படும் மக்கள் தங்களின் நிலையை எடுத்துரைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கதையின் நாயகியாக செவ்வந்தி என்ற கதாபாத்திரத்தில் சரிதாவின் அட்டகாசமான நடிப்பு காண்போரை கரைய வைத்தது. கோமல் சுவாமிநாதனின் வசனம் ஒவ்வொன்றும் சமூகத்தின் நிலையை நெற்றியில் அடித்தார் போல துணிச்சலுடன் வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் அரசை எதிர்பார்த்து ஏமாந்த ஊர் மக்கள் தாங்களாகவே ஒரு கால்வாய் வெட்டலாம் என தீர்மானிக்கும் போது அதையும் செய்யவிடாமல் அரசாங்கம் எதிர்க்கிறது. எப்படி அந்த பிரச்சனையை ஊர் மக்கள் எதிர்த்து போராடினார்கள்? ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பது தான் தண்ணீர் தண்ணீர் படத்தின் கதைக்களம். 

இன்று தண்ணீர் பிரச்சினை இருக்கும் பல இடங்களில் எல்லாம் மக்கள் காலி தண்ணீர் குடங்களுடன் மறியல் செய்வதை பார்த்ததுண்டு. அவை அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியை அமைந்தது தண்ணீர் தண்ணீர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாலு குடம் தண்ணீருக்காக மக்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக இப்படத்தின்  மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார் பாலச்சந்தர். 

சரிதா மற்றும் ராதாரவி திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது தண்ணீர் தண்ணீர் திரைப்படம். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சிறப்பாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களுக்கு கவியரசு கண்ணதாசன் தான் வரிகளை எழுதினார். அதுவே அவர் கடைசியாக எழுதிய பாடல் வரிகளாகின. மீதம் உள்ள பாடல்களின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார். இப்படி பல ஜாம்பவான்களின் கூட்டணியில் அமைத்த ஒரு வெற்றி படம் தான் தண்ணீர் தண்ணீர். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget