மேலும் அறிய

42 years of Thanneer Thanneer: பூமியின் தீராத தாகம்... சமுதாய அவலத்தை தோலுரித்த 'தண்ணீர் தண்ணீர்' வெளியான நாள் இன்று..!  

42 years of Thanneer Thanneer : தண்ணீர் பஞ்சத்தால் ஊர் மக்கள் படும் அவல நிலையை துணிச்சலாக தோலுரித்த கே.பாலச்சந்தரின் 'தண்ணீர் தண்ணீர்' திரைப்படம் வெளியான நாள் இன்று.

காலங்காலமாக தமிழ்நாடு சந்தித்து வரும் ஒரு மிக பெரிய பிரச்சினை என்றால் அது தண்ணீர் பிரச்சினை தான். இப்படி பட்ட ஒரு சமூக அவலத்தை  கையில் எடுத்து அதை சினிமாவாக்கியது மட்டுமல்லாமல் பரிதாப மக்களின் அவல நிலை, அலட்சியம் செய்யும் அரசாங்க அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அரசியல்வாதிகள் என அனைவரின் சுயத்தையும் துணிச்சலாக இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் தோலுரித்து காட்டிய திரைப்படம் தான் 1981ம் ஆண்டு வெளிவந்த "தண்ணீர் தண்ணீர்" திரைப்படம். இப்படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளை கடந்தாலும்  இப்படம் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த ஒரு படைத்தலும் கொடுக்க முடியாது. 

 

42 years of Thanneer Thanneer: பூமியின் தீராத தாகம்... சமுதாய அவலத்தை தோலுரித்த 'தண்ணீர் தண்ணீர்' வெளியான நாள் இன்று..!  
தண்ணீர் பஞ்சத்தை வைத்து தமிழ் சினிமாவை முதன்முதலில் கலக்கிய  படம் தான் 'தண்ணீர் தண்ணீர்' திரைப்படம். கோமல் சுவாமிநாதனின் கதை வசனத்தில் உருவான இந்த நாடகம் மாபெரும் வெற்றி பெற்று மக்களின் வரவேற்பை பெற்றது. அந்த நாடகத்தை சிறுது மேம்படுத்தி அதன் உரிமையை கைப்பற்றி கே. பாலசந்தர் இப்படத்தை இயக்கினார். 

கோவில்பட்டி அருகே உள்ள அத்திப்பட்டி என்ற கிராமத்தில் நடைபெறும் கதைக்களமாக அமைந்த இப்படத்தில் ராதாரவி, சரிதா, வாத்தியார் ராமன், குகன், சார்லி, சண்முகம் மற்றும் பலர் நடித்திருந்தனர். பல ஆண்டுகாலமாக மழையே பெய்யாத அந்த கிராமத்தில் ஏரி, குளம், ஆறு, கிணறு என அனைத்து இடங்களும் வறட்சியில்  பிளந்து கிடைக்க அங்கே இருக்கும் மக்கள் தாகத்தால் தவிக்கும் காட்சி பார்வையாளர்களை மிரள செய்தது. அது மட்டுமின்றி மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத கிராமத்தில் அவதிப்படும் மக்கள் தங்களின் நிலையை எடுத்துரைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கதையின் நாயகியாக செவ்வந்தி என்ற கதாபாத்திரத்தில் சரிதாவின் அட்டகாசமான நடிப்பு காண்போரை கரைய வைத்தது. கோமல் சுவாமிநாதனின் வசனம் ஒவ்வொன்றும் சமூகத்தின் நிலையை நெற்றியில் அடித்தார் போல துணிச்சலுடன் வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் அரசை எதிர்பார்த்து ஏமாந்த ஊர் மக்கள் தாங்களாகவே ஒரு கால்வாய் வெட்டலாம் என தீர்மானிக்கும் போது அதையும் செய்யவிடாமல் அரசாங்கம் எதிர்க்கிறது. எப்படி அந்த பிரச்சனையை ஊர் மக்கள் எதிர்த்து போராடினார்கள்? ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததா? என்பது தான் தண்ணீர் தண்ணீர் படத்தின் கதைக்களம். 

இன்று தண்ணீர் பிரச்சினை இருக்கும் பல இடங்களில் எல்லாம் மக்கள் காலி தண்ணீர் குடங்களுடன் மறியல் செய்வதை பார்த்ததுண்டு. அவை அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியை அமைந்தது தண்ணீர் தண்ணீர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாலு குடம் தண்ணீருக்காக மக்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அப்பட்டமாக இப்படத்தின்  மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார் பாலச்சந்தர். 

சரிதா மற்றும் ராதாரவி திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது தண்ணீர் தண்ணீர் திரைப்படம். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சிறப்பாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களுக்கு கவியரசு கண்ணதாசன் தான் வரிகளை எழுதினார். அதுவே அவர் கடைசியாக எழுதிய பாடல் வரிகளாகின. மீதம் உள்ள பாடல்களின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதினார். இப்படி பல ஜாம்பவான்களின் கூட்டணியில் அமைத்த ஒரு வெற்றி படம் தான் தண்ணீர் தண்ணீர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget