மேலும் அறிய

Director Vijay: ‛வரிசையில் நின்ற எமிஜாக்சன்... ஆடிசன் இல்லாமல் தேர்வு...’ மனம் திறந்த இயக்குனர் விஜய்!

"நான் அதை விட சிறப்பாக எதையும் செய்யவில்லை...." என்று மனம் திறக்கிறக்கிறார் இயக்குனர் விஜய்!!

1900களின் மெட்ராஸை சிறப்பாக பிரதிபலித்த படம் என்றால் அது மதராசப்பட்டினமாகத்தான் இருக்க வேண்டும். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், எமி ஜாக்சனை இந்த படம் இந்திய திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. அந்த காலக் காதல் கதை, தனது 12 வருடங்களை ஜூலை 09 அன்று கொண்டாடியது.

ஒரு நேர்காணலின் போது, படம் மற்றும் திரைக்குப் பின்னால் நடந்த விஷயங்கள் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு படத்தின் இயக்குனர் விஜய் பதிலதித்தார்.


Director Vijay: ‛வரிசையில் நின்ற எமிஜாக்சன்... ஆடிசன் இல்லாமல் தேர்வு...’ மனம் திறந்த இயக்குனர் விஜய்!

மதராசப்பட்டினத்திற்கு 12 ஆண்டுகள் ஆகிறது. அதைப்பற்றி நிங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விஜய்: 12  வருஷம் ஆகிடிச்சுனு நம்ம முடியவிலை! எங்கள் அனைவருக்கும் இது ஒரு சிறப்பு படம். படப்பிடிப்பின் கடினமான நாட்கள் மற்றும் தூக்கமில்லாத இரவுகள் அனைத்து முயற்சியும் பயனுள்ளதாக  இருந்தது. நாங்கள் பரிசோதனை செய்து எங்கள் உள்ளுணர்வுடன் சென்றோம், அது வேலை செய்தது. மதராசப்பட்டினம் இன்றுவரை என்னுடைய சிறந்த படைப்புகளில் ஒன்றாகவுள்ளது . நான் அதை விட சிறப்பாக எதையும் செய்யவில்லை என்று நான் சந்தோசம் படுவதா அல்லது வருத்தப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த படம் எப்படி உருவானது?

விஜய்: முதலில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா சாரிடம் நான் ஒரு ஸ்கிரிப்டை விவரித்ததும், அவர் என்னை ஆர்யாவிடம் அழைத்துச் சென்றார். கல்பாத்தி அகோரம் சார் மூலம் இது எங்கள் அனைவரின் கனவுப் படமாக அமைந்தது. அவர் தான் இத்திட்டத்திற்கு முதுகெலும்பாக இருந்தார். அப்போது நான் பெரிய இயக்குநரும் இல்லை, ஆர்யாவும் நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார்.

எனவே, அந்த நேரத்தில், எங்கள் படத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டை முதலீடு செய்ய நம்பிக்கை தேவைப்பட்டது. எமியின் கதாபாத்திரம் முழு ஸ்கிரிப்டையும் இயக்குகிறது, மேலும் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான நபரை நான் பெற்றவுடன், எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குத் தெரியும். ஆமியை நாங்கள் கண்டுபிடித்தது கடவுளின் ஆசீர்வாதமாகும்.


Director Vijay: ‛வரிசையில் நின்ற எமிஜாக்சன்... ஆடிசன் இல்லாமல் தேர்வு...’ மனம் திறந்த இயக்குனர் விஜய்!

அந்த கதாபாத்திரத்திற்கு எமிதான் முதலில் தேர்வாக இருந்தாரா?

விஜய்: நாம் எப்பொழுதும் பெரிய விஷயத்தையே குறிவைக்கிறோம், நாங்கள் ஹாலிவுட் நடிகைகளுக்காக முயற்சி செய்தோம். நான் எங்கள் ஏஜண்ட் மூலம் வனேசா ஹட்ஜன்ஸை அணுகினேன். ஆனால் நான் எப்போதும் சொல்வேன், எமி படத்திற்காக பிறந்தவர். மிஸ் டீன் வேர்ல்ட் படத்தை நெட்டில் பார்த்தேன். அவர் பெயர் எனக்குத் தெரியாது, ஆனால் நான் லண்டனுக்கு வரும்போது இந்தப் பெண்ணைச் சந்திக்க விரும்புவதாக எனது இங்கிலாந்து ஏஜெண்டிடம் சொன்னேன். எமியை சந்திக்கும் முன்பே அவர்தான் என் கதாநாயகி என்று எனக்குத் தெரிந்தது.

நான் இங்கிலாந்தில் வந்து பல பெண்களை ஆடிஷன் செய்தேன். ஆனால் எனது ஏஜண்டால் அவரது ஏஜண்டை அணுக முடியவில்லை. அதனால், என்னிடம் பொய் சொல்லிவிட்டு, ‘ஏமி நாளை வருவார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

Also Read | இடைக்கால பொதுச்செயலாளராக, ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை..!

ஆடிஷனின் கடைசி நாள், நான் என் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தேன். அவர் இங்கிலாந்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள் என்று கூட எனக்குத் தெரியாது. அவர் லிவர்பூலில் வாழ்ந்தாள், அது எங்களுக்கு திருச்சி போன்றது! அவருடைய முழுப்பெயர் கூட எனக்குத் தெரியாது. நான் 4-5 மணி நேரத்தில் முடிக்க வேண்டியதாகயிருந்தது, நான் பொறுமையிழந்தேன். ஆனால் திடீரென்று ஆடிஷன் கியூவில் நிற்பதைக் கண்டேன். எனவே, நான் மற்ற எல்லா பெண்களையும் விட்டுவிட்டு நேரடியாக அவளிடம் சென்றேன். என் ஏஜெண்டிடம் அவள்தான் என் கதாநாயகி என்று சொன்னேன். நான் அவரை ஆடிஷன் கூட செய்யவில்லை.

ஆர்யா பற்றிய உங்கள் கருத்து?

விஜய்: ஒரு நடிகரை விட, திரைப்படத்தில் அவரது பங்களிப்பு அதிகம். அவர் திட்டத்தின் முதுகெலும்பாக இருந்தார். அவர் அட்டவணை, பட்ஜெட் ஆகியவற்றைக் கண்காணிக்க உதவுவார். அவர் ஒரு இயக்குனரின் நடிகர்.


Director Vijay: ‛வரிசையில் நின்ற எமிஜாக்சன்... ஆடிசன் இல்லாமல் தேர்வு...’ மனம் திறந்த இயக்குனர் விஜய்!

உங்கள் கேரியரில் இவ்வளவு சீக்கிரம் ஒரு பீரியட் ஃபிலிம் எடுப்பது அதிர்ஷ்டம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

விஜய்: தமிழ் சினிமாவுக்கு பீரியட் படங்கள் அதிர்ஷ்டம் இல்லை என்றார்கள். யாராவது கவலைப்பட வேண்டும் என்றால், அது தயாரிப்பாளர்தான். ஆனால் அகோரம் சார் தன்னம்பிக்கையுடன் இருந்தார், ஆர்யா எனக்கு பலம் கொடுத்தார்.

இன்று படத்தைப் பற்றி ஏதாவது மாற்ற உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், அதைச் செய்வீர்களா?

விஜய்: படத்தில் நான் எத்தனை தவறு செய்திருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். நாங்கள் அதை ஒரு குறிப்பிட்ட வழியில் திட்டமிட்டோம், ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில், நான் செய்திருக்கக்கூடிய சிறந்த விஷயம் அதுதான். ஒவ்வொரு படமும் ஒரு கற்றல். நான் ஸ்டோரிபோர்டு மற்றும் ஷாட் பேப்பர்களுடன் செட்டுக்கு செல்வேன். படத்தின் படப்பிடிப்பு 120 நாட்கள் எடுத்தோம், பலமுறை சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இன்றைக்கு 10 நாட்களில் படத்தை முடிக்கலாம்.

இவ்வாறு அந்த பேட்டியில் இயக்குனர் விஜய் தெரிவித்திருந்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget