’’என்னையும் திருமாவையும் பிரித்த சதிகார திமுக’’ நடந்தது என்ன? மனம் திறந்த அன்புமணி
’’திமுகவின் கூட்டணிக் கட்சி தலைவராக இருக்கக்கூடியவர் திருமாவளவன். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால்..’’ - அன்புமணி பேச்சு

முக சதிகாரர்கள் சூழ்ச்சி செய்து திருமாவையும், எங்களையும் (பா.ம.க) பிரித்து விட்டனர். திருமா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறார்; கடந்த காலங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து போராடி இருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கூட்டணிக் கட்சித் தலைவரை மதிக்க தெரியாத பிரேமலதா எப்படி மக்களை மதிப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திட்டக்குடி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டார். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் தமிழரசி ஆதிமூலத்துக்கு மாம்பழம் சின்னத்திலும், அதிமுக வேட்பாளர்கள் புவனகிரி சட்டமன்றத் தொகுதி அருண்மொழித்தேவன் மற்றும் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி முருகுமாறன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்கு சேகரித்து, விருத்தாச்சலத்தில் தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய அன்புமணி கூறியதாவது:
’’திமுகவின் கூட்டணிக் கட்சி தலைவராக இருக்கக்கூடியவர் திருமாவளவன். எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக் கூடியவர். நானும் அவரும் சேர்ந்துதான் ஆரம்பத்தில் போராடினோம். திமுக சதிகாரர்கள் எங்களை பிரித்து விட்டனர்.
கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த பிரேமலதா
விருத்தாச்சலத்தில் திமுக கூட்டணியின் வேட்பாளர் பிரேமலதா. அவர் உட்பட இந்த தொகுதியில் 9 வேட்பாளர்களை திருமாவளவன் தொகுதியில் அறிமுகம் செய்கிறார். அப்போது திமுக அமைச்சராக இருக்கக்கூடிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூட அவரை அறிமுகம் செய்யும்போது எழுந்து நின்று வணக்கம் சொன்னார்.
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் கால் மீது கால் போட்டுக் கொண்டு எழாமல் அமர்ந்திருந்தார். கூட்டணி கட்சித் தலைவரையே மதிக்க தெரியாத பிரேமலதா மக்களை மதிப்பாரா? மக்கள் இதை யோசிக்க வேண்டும்.’’
இவ்வாறு அன்புமணி பேசினார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















