மேலும் அறிய

Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - காரணம் என்ன?

நான் வெற்றி பெற்றால் என்னுடைய சின்னமான காலணியை போல் மக்களுக்காக உழைப்பேன் - சுயேட்சை வேட்பாளர்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

நாடாளுமன்ற தேர்தல் 

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை  பாராளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 20.03.2024-இல் தொடங்கி 27.03.2024-ஆம் நாளன்று நிறைவுற்றது. திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதிக்கு 42 நபர்களிடமிருந்து 49 வேட்பு மனுக்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களை 28.03.2024 அன்று கூறாய்வு பரிசீலனை செய்யப்பட்டு திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதியில் வரப்பெற்ற 49 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள் மற்றும் பிற காரணங்களால் 12 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 37 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் வேட்பு மனுக்களை திரும்பப்பெற 30.03.2024 பிற்பகல் 3.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதியில் 6 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டு 31 வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - காரணம் என்ன?

சுயேட்சை வேட்பாளர்  காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பு 

அப்போது சுயாட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 3 வேட்பாளர்கள் ஒரே சின்னத்தை கேட்டனர். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேட்பர்களிடம் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்தர்களோ அவர்களுக்கு முதலுரிமை கொடுக்கப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு வேட்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அளித்தார். மேலும், வேட்பாளர்களுக்கு தேர்தல் குறித்த புத்தகங்களையும் வழங்கினார். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த பால் வியாபாரி சுயேட்சை வேட்பாளர் ஜெகநாதன் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போதே தலையில் வேட்புமனுக்களை சுமந்தவாரு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார் . சுயேட்சை வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னத்தை தேர்தல் அதிகாரி ஒதுக்கீடு செய்து, வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை பெற்றுக்கொண்டு ஒதுக்கப்பட்ட சின்னமான காலணி சின்னத்தை மாலையாக கோர்த்து தனது கழுத்தில் அணிந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் - காரணம் என்ன?

இதுகுறித்து வேட்பாளர் ஜெகநாதன் பேட்டியளிக்கையில்;

அனைவரும் ஒதுக்கக்கூடிய காலணி சின்னத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், அனைத்து மக்களிடையே எளிய முறையில் சென்றடையும் என்பதற்காகவும், அனைத்து பகுதிகளிலும் சென்று என்னால் வாக்கு சேகரிப்பில் ஈடுபடமுடியாததாலும் அனைத்து மக்களும் எளியமுறையில் அறியக்கூடிய சின்னமாக நான் தேர்ந்தெடுத்தேன். நான் வெற்றி பெற்றால் என்னுடைய சின்னமான காலணியை போல் மக்களுக்காக உழைப்பேன். தற்போது நேரடியாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் சென்று வாக்கு சேகரிப்பேன், மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடப்போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா  அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget