மேலும் அறிய

Telangana Election 2023: தெலங்கானா அரசியலில் திடீர் திருப்பம்! காங்கிரஸிற்கு கை கொடுக்கும் ஜெகன்மோகனின் தங்கை!

Telangana Assembly Election 2023: தெலங்கானா தேர்தலில் திடீர் திருப்பமாக காங்கிரஸிற்கு ஆதரவளிப்பதாக, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளா அறிவித்துள்ளார்.

Telangana Assembly Election 2023: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு:

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,வரலாறு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வகையிலான ஒரு தேர்வை காலம் நமக்கு வழங்குகிறது. அரசியல் நலன் மற்றும் பெரிய பொதுநலன் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இப்போது உள்ளது. ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி வரவிருக்கும் தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்க முடிவு செய்திருக்கும் தியாகத்தின் இந்த முக்கியமான கட்டத்தில் இன்று நான் நிற்கிறேன். ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி பல தொகுதிகளில் காங்கிரஸின் வாக்கு வங்கியை சிதைக்கும் என கருத்துக்கணிப்புகள் காட்டுவதால், அவர்களுக்கான வாக்குகள் பிளவுபடாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.  தெலங்கானாவைக் காப்பாற்றுவதற்கான வரலாற்று நிகழ்வுக்கும்,  உடனடித் தேவையான கே.சி.ஆரின் கொடூரமான ஆட்சியை அகற்றுவதற்கு களம் அமைக்கப்பட்டுள்ளது. நான் எப்போதுமே தெலங்கானாவிற்காகவே நிற்கிறேன்.  மற்ற விஷயங்கள் அனைத்தும் எனக்கு அடுத்ததாகவே வரும். அதன் விளைவாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.  எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஒய்எஸ்ஆர் ரசிகர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஒய்.எஸ். ஷர்மிளா வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா தேர்தலில் பெரும் திருப்பும்:

ஐந்து மாநில தேர்தலில், தென்னிந்தியாவில் அமைந்துள்ள தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல், தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.  தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ள கேசிஆர் தலைமையிலான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜக கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. காங்கிரசுக்கும் மாநிலத்தில் ஆதரவு பெருகியுள்ளது. இந்த சூழலில் தான், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியும் தேர்தலில் போட்டியிடமால், காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

தேர்தல் களம் காங்கிரசுக்கு சாதகமா?  

ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை, ஊழல், அதிகரிக்கும் கடன் சுமை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என கேசிஆர்-க்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்து தீவிரமாக களமாடி வருகிறது. பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் விவசாயிகளை கவரும் விதமாக, ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைக்கும் என பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியும் தேர்தலில் போட்டியிடமால், காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், கூட்டணியில் சேராத ஓய்.எஸ். ஷர்மிளா, தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் வலுவாக்கியுள்ளது. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றியை இழக்கும் வாய்ப்புள்ள தொகுதிகளில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து, டிசம்பர் 3ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget