மேலும் அறிய

Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக வாக்குப்பதிவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடுமே தயாராகி கொண்டிருந்தது.

வாக்குப்பதிவு நிறைவு:

தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவை முன்னிட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணி வரை 63.20 சதவீத வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெறுவதற்கு சற்று முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து, டோக்கன் வைத்திருந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். தருமபுரியில் அதிகபட்சமாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

சீலிடப்பட்ட அறையில் வாக்கு இயந்திரங்கள்:

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிக்கு உரிய பூத் ஏஜெண்டுகள் முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர், வாக்கு இயந்திரங்கள் பத்திரமாக வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீலிடப்பட்டு, அந்த அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.

5 மணி நிலவரம்:

5 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக தருமபுரியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாமக்கல்லில் 67.37 வாக்குகளும், ஆரணி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 57.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்:

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது தொகுதியில் வாக்கு செலுத்தினர். மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு போன்றோரும், மற்ற அமைச்சர்களான உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோரும் அவரவர் தொகுதியில் வாக்கு அளித்தனர்.

திரை பிரபலங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, திரிஷா, அனிருத் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்களித்தனர். பிரபல நடிகர் சூரிக்கு மட்டும் வாக்கு இல்லை என்று கூறியதால் அவர் வாக்கு செலுத்தாமல் திரும்பி வந்தார்.

பல இடங்களில் மக்கள் வாக்கு அளிக்க மாட்டோம் என்று புறக்கணித்தனர். இதனால், அங்கு அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நீண்ட நேரத்திற்கு பிறகு வாக்களிக்க வைத்தனர். பல இடங்களில் முதியவர்கள் தள்ளாத வயதிலும் தங்களது ஜனநாயக கடமையை நேரில் வந்து முறையாக ஆற்றினர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue
வெடிக்கும் போதைப்பொருள் வழக்கு சிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் கலகத்தில் சினிமா வட்டாரம் Krishna Arrested
போர்க்கொடி தூக்கும் MLA-க்கள்!கலக்கத்தில் சித்தராமையா!அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார் | DK Shivakumar VS Sitharamaiah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jagan Moorthy: எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
எம்எல்ஏ ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி; சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகிறார்.?
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு!  வாக்கு கொடுத்த அமித்ஷா..  மாநில அரசியல் ஸ்கெட்ச்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா.. மாநில அரசியல் ஸ்கெட்ச்
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
TNEA Cutoff: வெளியான தரவரிசை; உயரும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள்- என்ன செய்யணும்? கல்வியாளர்கள் அட்வைஸ்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
"என் மகனுக்கு பதவி வேணும்” துரைமுருகன் கண்டிஷன்- தீவிர அரசியலுக்கு முற்றுப்புள்ளி?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
Embed widget