மேலும் அறிய

Tamil Nadu Election 2024: ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக வாக்குப்பதிவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடுமே தயாராகி கொண்டிருந்தது.

வாக்குப்பதிவு நிறைவு:

தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவை முன்னிட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், மாலை 5 மணி வரை 63.20 சதவீத வாக்குகள் தமிழ்நாடு முழுவதும் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெறுவதற்கு சற்று முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து, டோக்கன் வைத்திருந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். தருமபுரியில் அதிகபட்சமாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

சீலிடப்பட்ட அறையில் வாக்கு இயந்திரங்கள்:

வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிக்கு உரிய பூத் ஏஜெண்டுகள் முன்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர், வாக்கு இயந்திரங்கள் பத்திரமாக வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீலிடப்பட்டு, அந்த அறைகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், அந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.

5 மணி நிலவரம்:

5 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டிலே அதிகபட்சமாக தருமபுரியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நாமக்கல்லில் 67.37 வாக்குகளும், ஆரணி 67.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென்சென்னை தொகுதியில் 57.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள்:

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது தொகுதியில் வாக்கு செலுத்தினர். மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு போன்றோரும், மற்ற அமைச்சர்களான உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோரும் அவரவர் தொகுதியில் வாக்கு அளித்தனர்.

திரை பிரபலங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, திரிஷா, அனிருத் ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்களித்தனர். பிரபல நடிகர் சூரிக்கு மட்டும் வாக்கு இல்லை என்று கூறியதால் அவர் வாக்கு செலுத்தாமல் திரும்பி வந்தார்.

பல இடங்களில் மக்கள் வாக்கு அளிக்க மாட்டோம் என்று புறக்கணித்தனர். இதனால், அங்கு அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நீண்ட நேரத்திற்கு பிறகு வாக்களிக்க வைத்தனர். பல இடங்களில் முதியவர்கள் தள்ளாத வயதிலும் தங்களது ஜனநாயக கடமையை நேரில் வந்து முறையாக ஆற்றினர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Embed widget