Rajya Sabha By-election: தமிழ்நாட்டில் செப்டம்பர் 13-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திமுக கோரிக்கையை ஏற்று 3 இடங்களுக்கும் தனித் தனியாக தேர்தல் நடத்தும் விதமாக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவையடுத்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மாநிலங்களவை எம்பிக்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்தியலிங்கம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர்கள் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மாநிலங்களவையில் காலி இடங்கள் 3ஆக அதிகரித்தது.

தமிழ்நாட்டில் மூன்று இடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. திமுக கோரிக்கையை ஏற்று 3 இடங்களுக்கும் தனித் தனியாக தேர்தல் நடத்தும் விதமாக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 1ஆம் தேதி வேட்புபனு பரிசீலனை, வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3ஆம் தேதி ஆகும். தேர்தல் செப்டம்பர் 13 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரையிலும், முடிவுகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Temple For CM Jagan: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடி செலவில் கோயில்..!
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்



















