மேலும் அறிய

Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தல், வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி - ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்..!

Priyanka Gandhi: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், வயநாடு இடைத்தேர்தல் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ளது.

Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தலில் நவம்பர் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வயநாடு தொகுதி இடைத்தேர்தல்:

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன், சட்டமன்ற மற்றும் மக்களவை என மொத்தம் 50 தொகுதிகளுக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் அந்த தொகுதியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், அந்த தொகுதி மீண்டும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. 

வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி:

மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. கடந்த 2019ம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்ததிலிருந்து , அவர் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான சாத்தியமான போட்டியாளராக கருதப்பட்டார். சோனியா காந்தியின் விலகலை தொடர்ந்து, அவர் போட்டியிடும் காந்தி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி களம் காண்பார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி போட்டியிட்ட இரண்டு முறையும் வெற்றியை பரிசாக அளித்த, வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார்.

வெற்றி உறுதியான பின் போட்டியா?

அமேதி, ரேபரேலி மற்றும் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளராகக் கருதப்பட்டவர் 52 வயதான பிரியங்கா காந்தி. இந்நிலையில் போட்டியிடுவதற்கு முன்பே கிட்டத்தட்ட வெற்றி உறுதியான, கேரள மாநிலத்தைச் சேர்ந்த வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் மூலம் அவர் நேரடி அரசியலுக்குள் நுழைகிறார்.  2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, வரலாற்று ரீதியாக கேரளாவில் காங்கிரஸ் வலுவாக செயல்பட்டு வருகிறது . இந்த சூழலில் மக்கள் பிரதிநிதி பதவிக்காக முதல்முறையாக போட்டியிடும் பிரியங்கா காந்தி, தனக்கான களமாக தென்னிந்தியாவில் உள்ள வயநாடு தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி?

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா வெற்றி பெற்றால், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது வருவது இதுவே முதல் முறையாகும். இவரது தாயார் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். சகோதரர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார்.

ரோட் ஷோக்கு தயாராகும் காந்தி குடும்பம்:

வரும் நவம்பர் 13ம் தேதி வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் 23ம் தேதியன்று பிரியங்கா காந்தி, வேட்புமனுதாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் உடனிருப்பார்கள் என கூறப்படுகிறது. வேட்புமனுதாக்கலை தொடர்ந்து, கல்பேட்டா பகுதியில் காந்தி குடும்பத்தினர் ரோட் ஷோவில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சோனியா காந்தி டெல்லி வரவுள்ளார்.

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் ஏன்?

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, இந்தி பேசும் மாநிலங்களில் கட்சியின் இருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரேபரேலி தொகுதி எம்.பி., பதவியை தக்கவைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கடந்த ஜுன் மாதமே காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் சத்யம் மொகேரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Embed widget