மேலும் அறிய
கனிமொழி கருணாநிதியை சட்ட மன்ற தேர்தலில் நிறுத்துங்கள்: நாடார் சங்கத்தின் திடீர் கோரிக்கை!
களிர் உரிமைகளுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளின் நலனுக்கும் ஒரு சிறந்த பாதுகாப்பான அரசியல் தலைவராக விளங்க வாய்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். - எனவும் தெரிவித்துள்ளனர்.

கனிமொழி
Source : whatsapp
கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்: நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் கோரிக்கை.
முக்கியமான பங்கு வகிக்கும் சமுதாயமாக நாடார் சமுதாயம்
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர் அதில்..,” நாடார் சமுதாய மக்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும், ஒவ்வொரு கிராமங்களிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரவலாக வசித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் சமுதாயமாக நாடார் சமுதாயம் திகழ்கிறது.
கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு
பல்வேறு மாவட்டங்களை மையமாகக் கொண்டு, சுமார் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக சேவை செய்து வருவதையும், அவர்களில் எங்களது சமுதாயத்தை சேர்த்த பலருக்கு தங்களது நல்லாட்சியில் அமைச்சர் பொறுப்புகள் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதை எங்கள் சமுதாயம் நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூருகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று எங்கள் நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அவர் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும், மகளிர் உரிமைகளுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளின் நலனுக்கும் ஒரு சிறந்த பாதுகாப்பான அரசியல் தலைவராக விளங்க வாய்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொழில் பூங்காக்களை அமைத்து தர கோரிக்கை
மேலும், தாமிரபரணி ஆற்றின் நீரை அதன் நீர்ப்பாசனத் திறனை முழுமையாக பயன்படுத்தும் வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பயன்பாட்டிற்கு தேவையான விவசாய மாவட்டங்களில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களது ஆட்சியில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதையும், தொழில் பூங்காக்கள் இல்லாத குறையை படிப்படியாக நிவர்த்தி செய்து வருவதையும் எங்கள் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரிய அளவிலான இரண்டு அல்லது மூன்று தொழில் பூங்காக்களை அமைத்து தர வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.” எனவும் தெரிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion


















