மேலும் அறிய

Maharashtra Election: 50 தொகுதிகளில் இடைத்தேர்தல், மகாராஷ்டிரா & ஜார்கண்ட் தேர்தல் - பாஜக Vs I.N.D.I. கூட்டணி

Maharashtra Election: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுடன், 50 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Maharashtra Election: நாடு முழுவதும் நடைபெற உள்ள 50 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வயநாடு தொகுதி மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் 2024:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 288 தொகுதிகளை கொண்ட இந்த சட்டமன்றத்திற்கு, நவம்பர் 20ம் தேதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க 9.63 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஒரு புறம் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி அடங்கிய I.N.D.I. கூட்டணியும் தீவிரம் காட்டுகிறது.

ஆளும் பாஜக கூட்டணி மீது பல்வேறு அதிருப்திகள் நிலவுவதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கடந்த சில மாதங்களாகவே வாக்காளர்களை கவரும் விதமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும் மராத்திய இடஒதுக்கீடு, அண்மையில் ஆளும் கூட்டணியை சேர்ந்த அரசியல் தலைவரான் சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது போன்றவை அவர்களுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மகாராஷ்டிராவில் தீவிரமாக களமாடி வருகின்றனர். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் 30 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்தன. இதே வேகத்தில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலிலும் களமாட தயாராகி வருகின்றனர். இதனால்  பாஜக Vs I.N.D.I. கூட்டணி என மகாராஷ்டிரா சட்டமன்ற களம் சூடுபிடுத்துள்ளது.

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் 2024:

மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்டில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி,  நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில், வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்க 2.6 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிலமோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமினில் வெளியான ஹேமந்த் சோரன், மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். இதனிடையே, இடைக்கால முதலமைச்சராக இருந்த சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்தது, ஆளுங்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 9 தொகுதிகளை பாஜக கூட்டணியே கைப்பற்றியது. இதனால், மீண்டும் அங்கு ஹேமந்த் சோரன் ஆட்சியை பிடிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

50 தொகுதிகளில் இடைத்தேர்தல்:

இதனிடையே, உத்தரப்பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ம்ாற்றும் சிக்கிம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தது அல்லது உயிரிழந்தன் காரணமாக இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவனம் ஈர்க்கும் வயநாடு:

வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் ரேபரேலி தொகுதிய தக்கவைத்துக் கொண்டு, வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதியில், ராகுலின் உடன்பிறந்த சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget