மேலும் அறிய

Lok Sabha Election 2024: இன்னும் இரண்டு வாரமே தேர்தலுக்கு.. அனல் பறக்கும் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் - தகிக்கும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்காக இன்னும் இரண்டு வார காலமே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டிற்கு முதற்கட்டத்திலே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஏப்ரல் 19 தேர்தல்:

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பிருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியது, தேர்தல் தேதி ஏப்ரல் 19 என அறிவிப்பு வெளியான பிறகு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என சூடுபிடிக்கத் தொடங்கியது. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி, மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி.மு.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதிமய்யம் என பலமான கூட்டணியாக அமைந்துள்ளது.

தீவிர பரப்புரையில் அரசியல் கட்சிகள்:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டும் முதன்முறையாக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க இடம்பெற்றுள்ளது. அதேபோல, பா.ஜ.க., பா.ம.க., த.மா.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி தொடங்கியது முதலே தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியினர் இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகின்றனர். தங்களது கட்சிகளுக்காகவும், கூட்டணி கட்சியினருக்காகவும் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி ஏற்கனவே தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடந்த சில வாரங்களாகவே காலை முதல் இரவு வரை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியும் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் தொகுதியில் தனித்துப் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

சூடுபிடிக்கும் அரசியல் களம்:

இவர்கள் மட்டுமின்றி திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், தினகரன், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் தங்களது ஆதரவு கட்சிக்காக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவிற்கு இன்னும் இரண்டு வாரமே உள்ளதால், தமிழ்நாட்டில் காலை முதல் இரவு வரை அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமாக உள்ளது. நேரடியாக மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சிகளை விமர்சித்து தீவிர பரப்புரையிலும், வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். வெயில் அனல் பறந்து கொண்டிருக்கும் சூழலில், அரசியல் கட்சிகளின் தீவிர வாக்குசேகரிப்பால் தேர்தல் களமும் சூடுபிடித்து காணப்படுகிறது.

மேலும் படிக்க: Income Tax raid: நெருங்கும் தேர்தல்: தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

மேலும் படிக்க:  Congress Election Manifesto: நீட் கட்டாயமில்லை, பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget