மேலும் அறிய
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
வீரர்களுக்கான காப்பீடு (Insurance) தொகையை அரசாங்கமே ஏற்கும். காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். - ஈபிஎஸ் பேச்சு.

ஈபிஎஸ்
Source : whatsapp
காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். - எடப்பாடி பழனிச்சாமி செக்கானூரணியில் பேச்சு.
ஈபிஎஸ் - பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை திண்டுக்கல்லில் தொடங்கிய அவரது பயணம், மாலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, செக்காணூரணி பகுதிகளில் நடைபெற்றது.
கருணாநிதி குடும்பம் செழிக்க மட்டுமே திட்டங்களை தீட்டியவர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்து செக்காணூரணியில் உரையாற்றிய அவர், அதிமுக மக்களுக்காகத் தொடங்கப்பட்ட கட்சி ஆனால் திமுக ஒரு குடும்பத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களின் ஆசியோடு தான் இந்த இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கருணாநிதி குடும்பம் செழிக்க மட்டுமே திட்டங்களை தீட்டியவர்.
வாகன மானியம் ரூ25,000
"மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார்: அனைத்து குடும்பங்களுக்கும் மகப்பேறு உதவித் தொகையாக ரூ.10,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, இலவச பிரிட்ஜ், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ25,000 மற்றும் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள்.
பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்
தடையின்றி தரமான அரிசி, விலையில்லா பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேரோடு அழிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ரூ.5 லட்சம் அரசு நிதியுதவி. போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு. வீரர்களுக்கான காப்பீடு (Insurance) தொகையை அரசாங்கமே ஏற்கும். காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
210 இடங்களில் வெற்றி உறுதி
"210 இடங்களில் வெற்றி உறுதி" திமுக ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், "நமது கூட்டணி இயற்கையான மற்றும் வெற்றிக் கூட்டணி. நடைபெறவுள்ள தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என முழங்கினார். இறுதியாக, திருமங்கலம் வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரிய அவர், "பை-பை ஸ்டாலின்" எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion


















