மேலும் அறிய

Election 2021: தென்காசியில் பரபரப்பு: தொடங்கியது நிறுத்தப்பட்ட தபால் வாக்கு எண்ணும் பணி!

தென்காசியில் தபால் மறு வாக்கு எண்ணிக்கை பணி மீண்டும் தொடங்கியது.

தேர்தல் வழக்கு விபரம்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக அதிமுகவை சேர்ந்த வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறிப்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. எனவே, தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இதனடிப்படையில் இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டார். இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர், 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும். மேலும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.


Election 2021: தென்காசியில் பரபரப்பு: தொடங்கியது நிறுத்தப்பட்ட தபால் வாக்கு எண்ணும் பணி!

தபால் ஓட்டு எண்ணும் பணி:

இந்த நிலையில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தல் அலுவலரும், தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா தலைமையில் சுமார் ஏழு பேர் வாக்குகளை எண்ணி வருகின்றனர். மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த செல்வ மோகன் தாஸ் பாண்டியனும் வாக்கு என்னும் இடத்திற்கு வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தற்காலிகமாக வாக்கு எண்ணும்பணி நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியது. படிவம் 13, 13பி பரிசீலித்து சரிபார்த்த பிறகே 13 சி எனப்படும் ஓட்டு சீட்டுகளை எண்ண வேண்டும் என அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல் வாக்கு விபரம்

தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 18 வேட்பாளர்கள்  போட்டியிட்டனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் 89 ஆயிரத்து 315 வாக்குகளும் அதிமுகவின் செல்வ மோகன் தாஸ் 88,945 வாக்குகளும் பெற்றனர். இதனை அடுத்து 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த நீதி அரசர் ஜெயச்சந்திரன் தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை 10 நாட்களுக்குள் எண்ணி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஐந்தாம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார். 


Election 2021: தென்காசியில் பரபரப்பு: தொடங்கியது நிறுத்தப்பட்ட தபால் வாக்கு எண்ணும் பணி!

இந்த நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கை காலை 10 மணி அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு மேஜை கணக்கில், ஏழு பேர் கொண்ட குழு வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் எண்ணப்பட்டுள்ள இறுதி வாக்கு எண்ணிக்கை அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
சோழர் பெருமைபற்றி பாஜக பாடம்‌ எடுப்பதா? கபட திமுகதான் காரணம்- சாடிய விஜய்!
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
அதிகரிக்கும் நாய்கள் அட்டகாசம்.. கருணை கொலை செய்ய தமிழக அரசு உத்தரவா?
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
பழங்கள் மட்டுமே உண்டு, எடை குறைப்பது இத்தனை ஆபத்தை ஏற்படுத்துமா? மருத்துவர் எச்சரிக்கை!
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
டெல்லிக்கு பறந்த அமைச்சர் அன்பில் மகேஸ்; அதிரடி பயணம் எதுக்குன்னு தெரியுமா?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
TVK Vijay: தவெக-வுடன் கூட்டணியா? தயக்கம் காட்டும் அரசியல் கட்சிகள் - என்ன செய்யப்போகிறார் விஜய்?
Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Ponmudi : ’தொகுதி மாறும் பொன்முடி?’ தோல்வி பயம் காரணமா..? அதிருப்தியில் திமுக எம்.எல்.ஏ..!
’தொகுதி மாறும் பொன்முடி?’ தோல்வி பயம் காரணமா..?
Embed widget