மேலும் அறிய

கரூர் : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

புலியூர் பேரூராட்சியில் தலைவர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காமல் புலியூர் பேரூராட்சியில் மற்ற வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த அவரை வெற்றி பெறச் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு.

புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், திமுக உறுப்பினர் வேட்புமனு தாக்கல் செய்தததால் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 15 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக - 12, சிபிஐ - 1, பிஜேபி - 1, சுயேட்சை 1 வெற்றி பெற்றனர். இதில் தலைவர் பதவி ஆதி திராவிடர் பெண்ணிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று நடைபெற்ற தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் காலை நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளரை தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 


கரூர் : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

 

அதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி, முன்மொழிபவர் ஒருவரும், அதை வழிமொழிபவர் ஒருவரும் இல்லாத நிலையில் வேட்புமனு பெறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் திமுக உறுப்பினர்கள் 12 பேரில் 3வது வார்டில் வெற்றி பெற்ற புவனேஷ்வரி தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இதனை அடுத்து அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனுவினை தாக்கல் செய்யாததால் அவர் வெற்றி பெற்றதாக செயல் அலுவலர் பாலசுப்ரமணி அறிவித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் திமுகவை சார்ந்த உறுப்பினர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ரத்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். 

 


கரூர் : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

 

அப்போது அவர் பேசுகையில் -புலியூர் பேரூராட்சி மறைமுக தலைவர் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவினர் தாங்களாகவே ஒருவரை நிறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த இடத்தில் நாங்கள் போட்டியிடவில்லை. இதனால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். 

 

 


கரூர் : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

புலியூர் பேரூராட்சியில் கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டது உள்ளூர் அமைச்சருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. எனவே, கரூர் மாவட்டத்தில் கூட்டணிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும், கூட்டணி விரோத போக்கை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை மீறியது குறித்து எங்கள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம். கட்சித் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என தெரிவித்தார். புலியூர் பேரூராட்சியில் தலைவர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்காமல் புலியூர் பேரூராட்சியில் மற்ற வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த அவரை வெற்றி பெறச் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget