மதுவால் பாதிக்கப்படும் தர்மபுரி; அதிமுக ஆட்சி அமைந்த உடன் என்ன செய்வோம்? பட்டியலிட்ட செளமியா
தருமபுரியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை சரி செய்து கொடுப்பேன்- செளமியா அன்புமணி.

பாமக வெற்றி பெற்றவுடன் தர்மபுரி மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுவதோடு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க தருமபுரிக்கு சிப்காட் கொண்டுவரப்படும் என்று பிரச்சாரத்தின்போது சௌமியா அன்புமணி வாக்குறுதி அளித்துள்ளார்.
தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, இன்று தொகுதிக்குட்பட்ட நல்லாம்பள்ளி என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூடி இருந்த பொது மக்களிடம் சௌமியா அன்புமணி பேசியதாவது:
தருமபுரியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை சரி செய்து கொடுப்பேன்.
தொப்பூர்- கணவாய் பகுதியில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது பாமக. அதன் காரணமாக மேம்பாலம் கட்டுவதற்கு 930 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாமக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது அதன் காரணமாக இன்று மத்திய அரசு செவி சாய்த்து இத்திட்டத்திற்கு உதவியுள்ளது.
மதுவால் பாதிக்கப்படும் தர்மபுரி
ஆளும் திமுக அரசு இந்த மாவட்டத்திற்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. தர்மபுரி மாவட்டம் மதுவால் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய மாவட்டமாக இருக்கிறது.
அதிமுக ஆட்சி அமைந்த உடன்…
அதிமுக ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தி கொடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்திற்கு தொழில்பேட்டைகள் கொண்டு வந்து மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும்’’.
இவ்வாறு செளமியா அன்புமணி தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















