Anbumani: செளமியா வென்றால் ஒட்டுமொத்த தர்மபுரியே முன்னேறும்: ஒரு முறை வாய்ப்பு கொடுங்க- அன்புமணி உருக்கம்!
தர்மபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால் தர்மபுரி தொகுதி மட்டுமல்ல ஒட்டுமொத்த மாவட்டமே முன்னேறும். ஒரு நல்ல வேட்பாளருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்- தருமபுரியில் அன்புமணி உருக்கம்
தர்மபுரியில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவை ஆதரித்து அன்புமணி இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தருமபுரி நகரதிற்குட்பட்ட மதிகோண்பாளையம், பால் டிப்போ, பெரியார் சிலை, அன்னசாகரம், அரசு மருத்துவ கல்லூரி, நெசவாளர் காலனி, நான்கு ரோடு, குமாரசாமிபேட்டை பகுதி மக்களை சந்தித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அன்புமணி,
’’ஒரு நல்ல வேட்பாளரை நாங்கள் உங்களுக்கு கொடுத்துள்ளோம். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் அங்கே சென்று குரல் கொடுக்கக் கூடியவர் சௌமியா அன்புமணி.
தர்மபுரி மாவட்டமே முன்னேறும்
இவரை உங்கள் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் தர்மபுரி மாவட்டமே முன்னேறும். தொழில் நிறுவனங்கள் எதுவும் இல்லாமல் தர்மபுரி மாவட்டம் பின்தங்கியுள்ளது. செளமியா அன்புமணி வெற்றி பெற்றதும் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார்.
தர்மபுரி மாவட்டம் நீர் பாசன திட்டங்கள் இல்லை அதனை கொண்டு வருவார். தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடிநீர் பிரச்சனையை சரி செய்வார். மொரப்பூர் ரயில் திட்டம் விரைவாக செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்வார்.
நல்ல வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்
ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய நீங்கள் மாம்பழம் சங்கத்தில் வாக்களித்து சௌமியா அன்புமணியை வெற்றி பெறச் செய்யுங்கள்’’.
இவ்வாறு அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. திமுக, அதிமுக, தவெக, நாதக என்று நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய்க்கு செல்லுமிடமெல்லாம் கூட்டம் திரளும் நிலையில், அவர் இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்




















