மேலும் அறிய
பாஜகவுடன் கூட்டணி வைத்து பின், அதிமுக தொண்டர்களிடம் அவர்களிடம் இல்லை - சிடிஆர்.நிர்மல் குமார் !
எங்களுக்கு மட்டும் அனுமதியில் பிரச்சனை உள்ளது மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் தெரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். - சிடிஆர்.நிர்மல் குமார்.

சிடிஆர்.நிர்மல் குமார்
Source : whatsapp
2024 தேர்தல் வரை அதிமுக தனித்துவம் இருந்ததாக உணர்ந்தோம் இப்போது டெல்லிக்கு சென்றார்களோ அவர்கள் தொண்டர்களே அவர்களுடன் இல்லை.
வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி தேவை இல்லை
திருப்பரங்குன்றம் தமிழக வெற்றிக்காக வேட்பாளரும் தமிழக வெற்றிக் கழக இணை பொதுச் செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்...," தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களுக்கு எல்லா இடங்களிலும் திமுகவினர் அப்ஜக்ஷன் தெரிவித்திருக்கிறார்கள். அதைத் தாண்டி அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை எங்கள் தலைவரின் பிரச்சாரம் பல போராட்டங்களுக்குப் பிறகு அனுமதி கிடைத்துள்ளது. நிறைய இடங்களில் தலைவர் சுற்றுப்பயணம் திட்டம் அனுமதி கேட்டதற்கு தேதியை மாற்ற சொல்லி பல காரணங்கள் கூறினார்கள். நாளை திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. ஒவ்வொருவரும் உள்ளூர் காவல்துறையிடம் அனுமதி பெறுவது தான் போராட்டமாக உள்ளது. பூத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி தேவை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் காவல்துறையினர் ஒரு வருடங்களில் எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிகிறார்கள்.
சரிபார்க்கும் இடத்திற்கு மீண்டும் வரவேண்டும் என்று அவசியம் இல்லை.
எங்களுக்கு மட்டும் அனுமதியில் பிரச்சனை உள்ளது மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் தெரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். மதுரையில் தலைவர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். ஆனால் இன்னும் வரவில்லை வந்தவுடன் தேதியை சொல்கிறோம். இப்போதைக்கு புதுக்கோட்டையிலும், தர்மபுரியிலும் தேதியை மாற்ற சொல்லி காவல்துறை சொல்லி இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு அனுமதி இல்லை என்று சொல்கிறார்கள். விண்ணப்பித்த இரண்டு மணி நேரத்திலேயே சொல்லி இருக்கலாம். வேட்பாளர்கள் செல்போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்தால் பிரச்சாரத்தில் இருந்திருப்பார்கள். வேட்பாளர் சரிபார்க்கும் இடத்திற்கு மீண்டும் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. வேட்பாளர் மாற்றத்தில் அழுத்தம் இல்லை. 234 பேரில் நாங்கள் ஒன்று இரண்டு என்று மாற்றுவது பெரிய மாற்றமில்லை. 40% வாக்குகள் தெளிவாக உள்ளது அதில் என்ற மாற்றமும் இல்லை. வித்தியாசமான தேர்தல் ஆக இருக்கும். அனைத்து தொகுதியும் சமமாக உள்ளது எங்குமே வலு இல்லாமல் இல்லை. பங்கு சந்தை குறித்த விவரங்கள் எனது வேட்பு மனுவல் உள்ளது அதை அவர்கள் தெரிந்து கொள்ளாததால் அப்ஜக்ஷன் செய்தார்கள். சாலையில் நடைபெறும் பிரச்சாரத்தை காவல்துறை தான் கட்டுப்படுத்த முடியும் திருச்சியில் காவல்துறை சரியாக கட்டுப்படுத்தினார்கள் தலைவர் பிரச்சார வாகனத்திற்கு பின்பு யாரையும் அனுமதிக்கவில்லை. அதேபோல் காவல்துறை தான் அதை செய்ய முடியும் நாங்கள் அதை செய்ய முடியாது.
திமுகவுக்கு எங்களுக்கும் தான் போட்டி.
அதிமுக எனும் கட்சி எந்த மாதிரி இடத்தில் உள்ளது என எல்லாருக்கும் தெரியும் 2024 தேர்தல் வரை அவர்களுக்கு தனித்துவம் இருந்ததாக உணர்ந்தோம் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து டெல்லிக்கு சென்றார்களோ அவர்கள் தொண்டர்களே அவர்களுடன் இல்லை. அவர்களின் வாக்குறுதிகளை கூட யாரும் கண்டு கொள்ளவில்லை அவர்கள் 20 தொகுதி ஜெயிச்சாலே பெரிய விஷயம்தான். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்து விட்டதாக அதிமுக தொண்டர்களை பேசுகிறார்கள். கட்சி பொதுச் செயலாளர்களுக்கு ஒரு மரியாதை உள்ளது. ஆனால் டெல்லியில் இருந்து அழைப்பு வந்தவுடன் அடுத்த நிமிடம் டெல்லிக்கு போடுவது யாரும் பார்த்ததில்லை அவரைக் காப்பாற்றுவதற்காக அவர் போராடிக் கொண்டிருக்கிறார் அவர் எங்களைப் பற்றி பேசுவது சரியில்லை. அதிமுகவிற்கு தமிழக அரசியலில் இடமில்லை. திமுகவுக்கு எங்களுக்கும் தான் போட்டி.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
Advertisement
Advertisement




















