மேலும் அறிய

97 ஆண்டுகள் பழமையான ரயில்வே பள்ளி: வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி மூடத்திட்டம்!

விழுப்புரம் ரயில்வே பள்ளியில் ஜூன் 23-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் தவறும்பட்சத்தில் தபால் மூலம் அனுப்பப்படும் என பள்ளியின் முதல்வர் எச்சரிக்கை.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே குடியிருப்புக்கு மத்தியில் ரயில்வே இருபாலர் ஆங்கிலவழி உயர்நிலைப் பள்ளி (ரயில்வே மிக்ஸ்டு ஸ்கூல்) இயங்கி வருகிறது. சுற்றுச்சுவர் பாதுகாப்புடனும், பழங்காலத்து ஓடுகள் வேயப்பட்ட பள்ளிக் கட்டடங்களையும், விளையாட்டு மைதானம், மரங்களுடன் கூடிய, இடையூறில்லாத இயற்கைச் சூழலில் இந்தப் பள்ளி 4.2.1924 அன்று தொடங்கப்பட்டு நீண்ட காலமாக இயங்கி வருகிறது.


97 ஆண்டுகள் பழமையான ரயில்வே பள்ளி: வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி மூடத்திட்டம்!

முதலாம் வகுப்பு முதல் 6ஆம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளியாக தொடங்கிய இந்தப் பள்ளி 1998-இல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி: 10ஆண்டுகளுக்கு முன்புவரை 800 முதல் 1,000 மாணவ, மாணவிகளுடன் சிறப்பாக இயங்கி வந்த இந்தப் பள்ளி, தரம் குறைந்து மாணவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக இழந்தது.

பாடத் திட்டம் மாற்றம்: ஆங்கிலோ- இந்தியன் பாடத் திட்டத்துடன் ஆங்கில வழியில் இயங்கி வந்த இந்தப் பள்ளியில், ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் பயின்று வந்தனர். 2011ஆம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தியதால், ஆங்கில வழியில் இந்தப் பாடத் திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னைத் தலைமையக ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளி, மாவட்டக் கல்வித் துறையின் மூலம் தேர்வுகள் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து படிப்படியாக மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


97 ஆண்டுகள் பழமையான ரயில்வே பள்ளி: வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி மூடத்திட்டம்!

ரயில்வே நிர்வாகம், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி, இலவச பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. அதேபோன்று, ஊழியர்களின் பிள்ளைகள் படிக்க வைப்பதற்காக பிரதான நகரங்களில் பள்ளிகள் நடத்தி வருகிறது.

அதன்படி விழுப்புரம், வடக்கு ரயில்வே காலனி பகுதியில் ஆங்கிலோ இந்தியன் பாடப் பிரிவில் ரயில்வே உயர்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. ஆங்கிலேயேர் காலத்தில் இருந்து இயங்கி வரும் இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை சுமார், 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். இதில் ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் மட்டுமன்றி, வெளி மாணவர்களும் பயின்று வந்தனர்.

இப்பள்ளியில் கல்வி மட்டுமின்றி விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வந்ததால், இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இந்த நிலை கடந்த 2007ம் ஆண்டு வரை நீடித்தது. அதன்பிறகு ரயில்வே ஊழியர்கள் மத்தியில், தனியார் பள்ளி மோகம் அதிகரிக்க துவங்கியதால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.


97 ஆண்டுகள் பழமையான ரயில்வே பள்ளி: வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி மூடத்திட்டம்!

ஒரு வகுப்பிற்கு ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் 30 பேராவது இருந்தால் மட்டுமே வெளி மாணவர்களை சேர்க்க முடியும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் விதி. ஆனால், ரயில்வே ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்க முன்வராததால், வெளி மாணவர்களும் சேர முடியாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு வகுப்பாக மூடப்பட்டு வருகிறது. இதுவரை எல்.கே.ஜி., முதல் 6ம் வகுப்பு வரை மூடப்பட்டுள்ளது.

தற்போது, 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை நான்கு வகுப்புகள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நான்கு வகுப்பிலும் மொத்தம் 17 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். மாணவர் சேர்க்கை இல்லாததால், பள்ளியின் பெரும்பாலான வகுப்பறைகள் பூட்டியே கிடக்கிறது.


97 ஆண்டுகள் பழமையான ரயில்வே பள்ளி: வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றி மூடத்திட்டம்!

கொரோனா காரணமாக  பள்ளி திறக்கப்படாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன, ஆன்லைன் வகுப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டதாக ரயில்வே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் ஜூன் 23ஆம் தேதிக்குள் மாணவர்கள் அவர்களுடைய மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு மாற்றுச் சான்றிதழ் வழங்க வரவில்லை என்றால் அவர்களின் வீட்டுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என ரயில்வே பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கடந்த 97 ஆண்டுகளாக இயங்கி வரும் ரயில்வே பள்ளியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget